.

Pages

Monday, January 30, 2017

ஷார்ஜாவில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்தும் வசதி !

அதிரை நியூஸ்: ஜன-30
ஷார்ஜாவில் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக செலுத்த வேண்டிய நிலுவை அபராதங்கள் குறைந்தபட்சம் 1000 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் கட்ட வேண்டியவர்கள் இனி தவணை முறையில் (Installment Basis) செலுத்தலாம். இந்த சலுகை கம்பெனி வாகனங்களுக்குப் பொருந்தாது, தனிப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மேலும் தவணை முறையில் அபராதங்களை செலுத்தினாலும் உங்களுடைய வாகனத்திற்கான உரிமை பத்திரத்தை (Car Registration Renewal) புதுப்பித்துக் கொள்ள இயலும். இந்த திட்டம் அமீரகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் மாறாக வெளிநாட்டு பதிவு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கு பொருந்தாது.

இந்தத் தவணைத் திட்டத்தின்படி, ஷார்ஜாவிற்கு வெளியே நிகழும் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை முழுமையாக செலுத்த வேண்டும்.

ஷார்ஜாவிற்குள் நிகழ்ந்த குற்றங்களுக்கான அபராதத்தில் 50 சதவிகிதத்தை முதல் தவணையாகவும் எஞ்சியவற்றை அந்த வருடத்திற்குள் செலுத்திக் கொள்ளலாம். எனினும், தங்களுடைய வாகனத்தை விற்க (Sell), ஏற்றுமதி (Export) செய்ய அல்லது உரிமையாளர் பெயர் மாறுதல் (Name Transfer) செய்ய விரும்புபவர்கள் அபராதங்களை முழுமையாக செலுத்தியே ஆக வேண்டும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.