அதிரை நியூஸ்: ஜன-25
முன்பு TransAD எனப்பெயரில் சேவையாற்றி தற்போது ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre) என்று பெயர் மாற்றம் பெற்றுள்ள அபுதாபி நகர டேக்ஸி சேவையகம் 7,645 வாகனங்களுடன் இயங்கி வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் கடந்த ஆண்டு சுமார் 73.4 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் மறந்துவிட்டுச் சென்ற சுமார் 8,900 மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 3,353 மணி பர்சுகள், 2,498 கை பைகள், ஏடிஎம் கார்டுகள், கண்ணாடிகள், சாவிக் கொத்துகள், மருந்துகள், 23 குடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றாலும் சுமார் 1,677 பொருட்கள் கேட்பாரின்றி தங்கியுள்ளன.
பயணிகள் மறந்து விட்டுச் செல்லும் பொருட்களில் சுமார் 85 சதவிகிதம் கண்டுபிடிக்கப்படுவதாகவும் எஞ்சியவை பிற பயணிகளால் எடுத்துச் செல்லப்படுவது அல்லது வேறு எங்காவது மறந்து விட்டு வரும் பொருட்களை டேக்ஸியில் தவறவிட்டதாக கருதித் தரப்படும் புகார்களே என டேக்ஸி நிறுவனத்தின் அழைப்பு மைய தலைமை அதிகாரி கவ்லா அல் தஹேரி அவர்கள் தெரிவித்தார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
முன்பு TransAD எனப்பெயரில் சேவையாற்றி தற்போது ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre) என்று பெயர் மாற்றம் பெற்றுள்ள அபுதாபி நகர டேக்ஸி சேவையகம் 7,645 வாகனங்களுடன் இயங்கி வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் கடந்த ஆண்டு சுமார் 73.4 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் மறந்துவிட்டுச் சென்ற சுமார் 8,900 மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 3,353 மணி பர்சுகள், 2,498 கை பைகள், ஏடிஎம் கார்டுகள், கண்ணாடிகள், சாவிக் கொத்துகள், மருந்துகள், 23 குடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றாலும் சுமார் 1,677 பொருட்கள் கேட்பாரின்றி தங்கியுள்ளன.
பயணிகள் மறந்து விட்டுச் செல்லும் பொருட்களில் சுமார் 85 சதவிகிதம் கண்டுபிடிக்கப்படுவதாகவும் எஞ்சியவை பிற பயணிகளால் எடுத்துச் செல்லப்படுவது அல்லது வேறு எங்காவது மறந்து விட்டு வரும் பொருட்களை டேக்ஸியில் தவறவிட்டதாக கருதித் தரப்படும் புகார்களே என டேக்ஸி நிறுவனத்தின் அழைப்பு மைய தலைமை அதிகாரி கவ்லா அல் தஹேரி அவர்கள் தெரிவித்தார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.