அதிராம்பட்டினம், ஜன-23
பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே, 74 கி.மீ. துார பாதையில் அதிராம்பட்டினம், திருநெல்லி காவல் நிலையம், யார்டு, மாங்குடி, மாவூர் சாலை, அம்மனுார், ஆலத்தம்பாடி யார்டு கட்டடங்கள், நடை மேம்பாலம் ஆகியன அமைக்க 17.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டன. மேலும் தில்லைவிளாகம் மற்றும் முத்துப்பேட்டையில் நிலைய கட்டடம், பிளாட் பாரங்கள், நடை மேம்பாலங்கள், பிளாட் பார மேற்கூரை ஆகியன அமைக்க 19.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டன. மொத்தம், 36.49 கோடி ரூபாய் செலவிலான இப்பணிகளை 10 மாதங்களுக்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயித்து இருந்தது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடற்கரை செல்லும் பாதையில் உள்ள இரயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காரைக்குடியில் இருந்து ரெடிமிக்ஸ் கான்கிரட் கலவை கொண்டுவந்து கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டன. இரட்டை ரயில்கள் கடந்து செல்லும் வகையில் 35 x 15 மீட்டர் பரப்பளவில் பாலம் அமைக்கப்படுகின்றன. இதன் பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. அதேபோல் அதிராம்பட்டினம் நசுவினி ஆற்று ரயில் பாதை பாலம் பணியும் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே, 74 கி.மீ. துார பாதையில் அதிராம்பட்டினம், திருநெல்லி காவல் நிலையம், யார்டு, மாங்குடி, மாவூர் சாலை, அம்மனுார், ஆலத்தம்பாடி யார்டு கட்டடங்கள், நடை மேம்பாலம் ஆகியன அமைக்க 17.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டன. மேலும் தில்லைவிளாகம் மற்றும் முத்துப்பேட்டையில் நிலைய கட்டடம், பிளாட் பாரங்கள், நடை மேம்பாலங்கள், பிளாட் பார மேற்கூரை ஆகியன அமைக்க 19.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டன. மொத்தம், 36.49 கோடி ரூபாய் செலவிலான இப்பணிகளை 10 மாதங்களுக்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயித்து இருந்தது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடற்கரை செல்லும் பாதையில் உள்ள இரயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காரைக்குடியில் இருந்து ரெடிமிக்ஸ் கான்கிரட் கலவை கொண்டுவந்து கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டன. இரட்டை ரயில்கள் கடந்து செல்லும் வகையில் 35 x 15 மீட்டர் பரப்பளவில் பாலம் அமைக்கப்படுகின்றன. இதன் பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. அதேபோல் அதிராம்பட்டினம் நசுவினி ஆற்று ரயில் பாதை பாலம் பணியும் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.