.

Pages

Saturday, January 21, 2017

அமெரிக்கா நடிகையை சிந்திக்கத் தூண்டிய குர்ஆன் !

அதிரை நியூஸ்: ஜன-21
அமெரிக்கா, ஹாலிவுட்டின் முன்னனி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்தவர் லிண்ட்சே லோகன் அவர்கள் துருக்கிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ள பேட்டியை தொடர்ந்து அவர் இஸ்லாத்தை தழுவி விட்டாரா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

கடந்த வருடம் குர்ஆன் பிரதி ஒன்றை லிண்ட்சே லோகன் அவர்கள் நெஞ்சோடு அனைத்தபடி இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து சக அமெரிக்கர்களால் அன்னியரை போல் நடத்தப்பட்டு மனம் வெறுத்து அமெரிக்காவை விட்டே வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

தன்னுடைய சவுதி நண்பர் ஒருவர் திருக்குர்அன் ஒன்றை பரிசளித்ததை தொடர்ந்து வாசிக்கத் துவங்கியது முதல் தனக்கு ஆன்மீக அனுபவத்தையும் வாழ்வின் உண்மையான அர்த்தத்தையும் கண்டுகொள்ள துவங்கியதாகவும், 'என்னை நான் யார்' என உணர்ந்த கொள்ள உதவியதாகவும், மன அமைதியை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களிலிருந்து பழைய பதிவுகள் அனைத்தையும் சுத்தமாக நீக்கிவிட்டு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்ற முகமனை பதிவேற்றி வைத்துள்ளார். நான் என்னுடைய விருப்பப்படி குர்ஆனை படிப்பதற்கு எனக்கு உரிமையில்லையா? என தன்னை தூற்றிய அமெரிக்க மக்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதே அமெரிக்கர்கள் 'அவர் நடிகையாக இருந்தபொழுது வாழ்ந்த இந்த அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கையை வரவேற்றவர்கள்'

முன்பு, லிண்ட்சே லோகன் அவர்கள் துருக்கி மற்றும் சிரியாவில் வாழும் அகதிகளுக்காக மனிதாபிமான உதவிகளை மனமுவந்து செய்ததற்காகவும் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சகோதரி லிண்ட்சே லோகன் அவர்களுக்கு நேர்வழி கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

தமிழில்: நம்ம ஊரான்
Sources: Arab News / Msn

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.