.

Pages

Monday, January 30, 2017

கடும் கோடையிலும் ஜில்லிடும் மக்கா ஹரம் ஷரீஃப் தரைத்தளம், காரணம் என்ன?

அதிரை நியூஸ்: ஜன-30
புனித உம்ரா மற்றும் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற மக்கா சென்று திரும்பிய யாத்ரீகர்கள் புனித காபாவின் தவாப் சுற்றும் தரை பகுதியில் கடும் கோடை காலத்திலும் ஜில்லென்று பாதத்திற்கு கீழ் சுகமாக இலங்குவதை அனுபவித்திருப்பீர்கள், என்ன காரணம்?

இதுவரை பரவலாக, கிரேனைட் மார்பிள்களுக்கு அடியில் செலுத்தப்படும் நீர் மற்றும் ஒருவகை ஜெல்லால் (Gel) தான் ஜில்லென்று இருக்கின்றதென என நம்பப்பட்டு வந்தது ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல.

புனித ஹரம் ஷரீஃப் எங்கும் 3 வகையான கிரானைட் மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'தவாப்' சுற்றும் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள வெண்ணிற மார்பிள் கற்கள் 120 செ.மீ நீளமும் 60 செ.மீ அகலமும் உடையவை. இதன் உயரம் 5 செ.மீ மட்டுமே. கோடையில் கடும் சூட்டை உமிழும் சூரியக்கதிர்களை உள்ளிழுக்காமல் அப்படியே திருப்பி அனுப்பும் தனித்துவ தன்மையுடையவை இந்த மார்பிள் கற்கள். இப்படியாக கடும் சூட்டை திருப்பியனுப்புவதால் (Reflects Back) தான் புனித காபாவின் தரைப்பகுதி எப்போதும் 'சில்லென்று' சுகமாக விளங்குகிறது.

மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியதும், விலை மதிப்புமிக்கதுமாக இந்தக் கற்களின் பெயர் 'தஸ்ஸோஸ்' (Thassos) அல்லது 'அல்தாஸ்' (Altass) என்று அழைக்கப்படுகின்றன. இவை கிரீஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என இரண்டு புனிதத் தலங்களுக்கான நிர்வாகத் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Sources: Khaleej Times / wn.com
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.