.

Pages

Monday, January 23, 2017

துபாயில் தீயணைப்பு படகுகள் அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஜன-23
இன்டெர்செக் (Intersec - 2017) எனும் புதிய தீயணைப்பு மற்றும் சிவில் பாதுகாப்புக்கான புதிய கருவிகள் மற்றும் செயலிகளுக்கான (Fire Safety Apps) கண்காட்சி துபை சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சிகளுக்கான மையத்தில் ஜன- 22 முதல் 24 வரை நடைபெற்று வருகிறது.

பொதுவாக தீயணைப்புக்கான தேவை ஏற்படும் போது தீயணைப்பு வாகனங்களுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. துபை போன்ற நகரங்களின் பெரும்பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் போது நீர்நிலைகளை சுற்றியுள்ள கட்டிடங்களில் பற்றும் தீயை நீர்நிலைகளில் இருந்தவாரே நீரை பீய்ச்சியடித்து அணைப்பதற்கும் இன்ன பிற அவசர உதவிகளுக்கும் 'டால்பீன்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள மிதக்கும் தீயணைப்பு படகுகளை களமிறக்கியுள்ளது துபை சிவில் பாதுகாப்பு துறை (Dubai Civil Defense).

மேலும், ஜெட்பேக் எனப்படும் கருவிகளின் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்கு மேல் சற்றே பறந்தநிலையில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் புதிய நுட்பத்தையும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.