தஞ்சாவூர் மாவட்டம், சங்கீத மகாலில் 28வது சாலை பாதுகாப்பு வார விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நேற்று (19.01.2017) நடைபெற்றது.
28வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:
சாலை விதிகளை கடைபிடித்து நடக்க வேண்டும். பள்ளி மாணவ மாணவியர்கள் சாலைகளில் எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலை கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும். வாகன ஓட்டுநர்கள் மிதமான வேகத்தில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தவிர்க்க வேண்டும்.
கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை ஒட்ட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 232 நபர்கள் சாலை விபத்தில் இறந்துள்ளனர். இந்த இறப்பிற்கு காரணம் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமலும், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்குவதால் விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
பேருந்து பயணத்தின் போது இளைஞர்கள் முதியவர்கள் அமருவதற்கு இடம் கொடுத்து உதவி செய்ய வேண்டும். சாலை விதிகள் தொடர்பாக தங்களுடைய பெற்றோர்கள் உற்றார் உறவினர்களுக்கு மாணவ மாணவியர்கள் தெரியப்படுத்த வேண்டும்.
சாலை விதிகள் பின்பற்றி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். பள்ளி மாணவ மாணவியர்கள் சிறந்த கல்வி கற்று, வாழ்க்கையில் நல்ல நிலையில் எட்ட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பேசினார்.
சாலை பாதுகாப்பு வார விழா 17.01.2017 முதல் 23.01.2017 வரை ஒரு வார காலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டிää கட்டுரைப் போட்டிää ஓவியப்போட்டிää விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற முதல் 3 மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேச்சுப்போட்டியில் கும்பகோணம், சரஸ்வதி பாடசாலா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ். சுமதி முதல்பரிசும், தஞ்சாவூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தெ.சம்யுத்தா இரண்டாம் பரிசும், தஞ்சாவூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ம.வீரபாண்டி மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
கட்டுரைப்போட்டியில் தஞ்சாவூர் ஆக்ஸிலீயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆ.ஸ்வேதா முதல் பரிசும், வல்லம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த ரா.பிரியதர்சினி இரண்டாம் பரிசும், தஞ்சை யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சி.ஆனந்தகிருஷ்ணன் மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
ஓவியப்போட்டியில் தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏ.நவீன் முதல் பரிசும், மேம்பால் அரசு மகளிர்காது கோளதோர் பள்ளியைச் சேர்ந்த எஸ். அகிலன் இரண்டாம் பரிசும், கும்பகோணம் நகர மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த எஸ்.பரணிதரன் மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு வாசகங்கள் போட்டியில் மா.ஜெயலெட்சுமி முதல் பரிசும், மு.காவியா இரண்டாம் பரிசும், பி.பாலாஜி மூன்றாம் பரிசும் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பாராட்டினார்கள்
முன்னதாக இந்தியன் செஞ்சுலுவை சங்கம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து கிராம விழிப்புணர்வு பயண வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த வாகனம் 23.01.2017 வரை ஒவ்வொரு கிராமமாக சுற்றி வரும்.
இந்நிகழ்ச்சியில் துணை போக்குவரத்து ஆணையர் எஸ்.கே.எம். சிவக்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜி.ரெங்கநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கி.விஜயகுமார், பிரபாகரன், கருப்பையன், இந்தியன் செஞ்சுலுவை சங்க பொருளாளர் முத்துகுமார், செயலாளர் ஜோசப் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
28வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:
சாலை விதிகளை கடைபிடித்து நடக்க வேண்டும். பள்ளி மாணவ மாணவியர்கள் சாலைகளில் எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலை கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும். வாகன ஓட்டுநர்கள் மிதமான வேகத்தில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தவிர்க்க வேண்டும்.
கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை ஒட்ட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 232 நபர்கள் சாலை விபத்தில் இறந்துள்ளனர். இந்த இறப்பிற்கு காரணம் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமலும், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்குவதால் விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
பேருந்து பயணத்தின் போது இளைஞர்கள் முதியவர்கள் அமருவதற்கு இடம் கொடுத்து உதவி செய்ய வேண்டும். சாலை விதிகள் தொடர்பாக தங்களுடைய பெற்றோர்கள் உற்றார் உறவினர்களுக்கு மாணவ மாணவியர்கள் தெரியப்படுத்த வேண்டும்.
சாலை விதிகள் பின்பற்றி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். பள்ளி மாணவ மாணவியர்கள் சிறந்த கல்வி கற்று, வாழ்க்கையில் நல்ல நிலையில் எட்ட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பேசினார்.
சாலை பாதுகாப்பு வார விழா 17.01.2017 முதல் 23.01.2017 வரை ஒரு வார காலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டிää கட்டுரைப் போட்டிää ஓவியப்போட்டிää விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற முதல் 3 மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேச்சுப்போட்டியில் கும்பகோணம், சரஸ்வதி பாடசாலா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ். சுமதி முதல்பரிசும், தஞ்சாவூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தெ.சம்யுத்தா இரண்டாம் பரிசும், தஞ்சாவூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ம.வீரபாண்டி மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
கட்டுரைப்போட்டியில் தஞ்சாவூர் ஆக்ஸிலீயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆ.ஸ்வேதா முதல் பரிசும், வல்லம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த ரா.பிரியதர்சினி இரண்டாம் பரிசும், தஞ்சை யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சி.ஆனந்தகிருஷ்ணன் மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
ஓவியப்போட்டியில் தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏ.நவீன் முதல் பரிசும், மேம்பால் அரசு மகளிர்காது கோளதோர் பள்ளியைச் சேர்ந்த எஸ். அகிலன் இரண்டாம் பரிசும், கும்பகோணம் நகர மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த எஸ்.பரணிதரன் மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு வாசகங்கள் போட்டியில் மா.ஜெயலெட்சுமி முதல் பரிசும், மு.காவியா இரண்டாம் பரிசும், பி.பாலாஜி மூன்றாம் பரிசும் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பாராட்டினார்கள்
முன்னதாக இந்தியன் செஞ்சுலுவை சங்கம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து கிராம விழிப்புணர்வு பயண வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த வாகனம் 23.01.2017 வரை ஒவ்வொரு கிராமமாக சுற்றி வரும்.
இந்நிகழ்ச்சியில் துணை போக்குவரத்து ஆணையர் எஸ்.கே.எம். சிவக்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜி.ரெங்கநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கி.விஜயகுமார், பிரபாகரன், கருப்பையன், இந்தியன் செஞ்சுலுவை சங்க பொருளாளர் முத்துகுமார், செயலாளர் ஜோசப் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.