.

Pages

Thursday, January 26, 2017

அதிரையில் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் புதிதாக திறப்பு, குடியரசு தின விழா கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், ஜன-26
இந்தியாவின் 68 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வியாழக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் இந்திய குடியரசு தின விழா இன்று காலை கடைத்தெரு அலுவலகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன.

விழாவிற்கு கட்சித் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். செயலர் வழக்கறிஞர் அப்துல் முனாப், கவிஞர் தாஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து குடியரசுதின உரை வழங்கினார். பின்னர் அதிராம்பட்டினம், கடைத்தெரு பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் சேக் அப்துல்லா, சாகுல் ஹமீது, அபூபக்கர், அன்சாரி, அபுல்ஹசன், அமீன், ஜாகிர், செய்யது முகம்மது, அப்துல் ரெஜாக் உள்ளிட்ட முஸ்லீம் லீக் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.