.

Pages

Monday, January 30, 2017

தஞ்சை மாவட்டத்தில் பிப்.6 ந் தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில்  வருகின்ற பிப்ரவரி 6.02.2017 முதல் 28.02.2017 வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி  9 மாத குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது தொடர்பாக மருத்துவத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (30.01.2017) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி ( MR Vaccine ) அனைத்து பள்ளிகளிலும் ஆண் பெண் இருபாலர்களுக்கும் பிப்ரவரி 6 முதல் 28 வரை வழங்கப்படவுள்ளது. வைரஸால் உண்டாகும் தட்டம்மை, ஜெர்மானிய மணல்வாரி என்று அழைக்கப்படும் ரூபெல்லா என்ற இந்நோய் காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் ஆகும்.  இந்நோய் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளை உடனடியாக இந்த வகை வைரஸ் பாதிக்கும். ஆரம்ப நிலையில் உள்ள ( Early AC ) கருவுற்ற பெண்களை ரூபெல்லா தாக்கும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைகள் இருதயம், கண் பாதிப்பு, காது கேளாமை போன்ற பிறவி குறைபாடுகளுடன் பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், இத்தடுப்பூசியினை 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

9 மாதம் முதல்15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 28 வரை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுககும் திட்டமிட்டபடி அனைத்து குழந்தைகளுக்கும் கிராம சுகாதார செவிலியர்களால் மருத்துவர்களின் மேற்பார்வையில் 1 நாளைக்கு 1000 குழந்தைகள் வீதம் இத்தகைய தடுப்பூசி வழங்கப்படவுளளது.

மொத்த நமது மாவட்டத்தில் 2005 பள்ளிகளில் 3,88,736 ஆண், பெண் மாணவர்களுக்கும் 1,725 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் 9 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் 1,36,591 குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.  இத்திட்டத்தினை சுகாதாரத்துறையுடன் இணைந்து கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தடுப்பூசி 5,25,327 ஆண், பெண் குழந்தைகளுக்கு போடப்படவுள்ளது. தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அங்கன்வாடி மையத்தில் வைத்து கிராம சுகாதார செவிலியர்களால் தடுப்பூசி போடப்படவுள்ளது.  எனவே, பெற்றோர்கள் தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்பாமல் இத்திட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.  சம்மந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படுத்த ஒத்துழைப்பு தரவேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.திருவளர்செல்வி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.