.

Pages

Wednesday, January 18, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு 'ஸ்டெம்' பயிற்சி ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜன-18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில்
பள்ளி மாணவிகளுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான 'ஸ்டெம்' பயிற்சி வகுப்பு இன்று (18-01-2017) புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் ஓ.சாதிக் கலந்துகொண்டு, அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு “அடிமையாதலும் நலவாழ்வும்” என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளித்தார். அதில் புகைப்பிடித்தல், மது அருந்துதலின் காரணமாக மனித உறுப்புகளான நுரையீரல், கல்லீரல், இதயம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க படத்துடன் விளக்கி கூறினார்.  

மேலும் மாணவிகளுக்கு, கல்லூரியில் இயங்கி வரும் நூலகங்களில் உள்ள புத்தகங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கப்பட்டது. கல்லூரி விலங்கியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்று அங்குள்ள பதப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்களை பார்வையிட்டு அது சார்ந்த தகவல்களை கேட்டறிந்து பயன்பெற்றனர். மேலும் மனித இரத்த வகை கண்டறியப்பட்டு இது பற்றி விளக்கப்பட்டது. வேதியியல் துறையில் உள்ள ஆய்வகங்களை பார்வையிட்டு அங்குள்ள ஆய்வக உபகரணங்கள் மற்றும் வேதிப் பொருட்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர்.

இந்த பயிற்சி முகாம் மாணவிகளுக்கும், ஆசிரிய ஆசிரியைகளுக்கும், மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தனர். இப்பயிற்சி முகாமில் ஐ.ஜாஸ்மின், எம்.பீர் பாத்து ஜெய்லானி, பா.பிரசன்னா, ஜி.முத்துமாரி ஆர்.ராதாகுமாரி, வி.கரோலின் வித்யாராணி எஸ்.சிதம்பரம் பி.விஜயகுமார்
உட்பட 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.