11 வயது முதல் 75 வயதுடைய காது கேளாத மாற்றுத்திறனாளிகள் காதுக்கு பின்னால் அணியும் காதொலிக்கருவிகள் பெற்றிட விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 11 வயது முதல் 75 வயதுடைய பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் செவித்திறன் குறைவுடைய மாணவ, மாணவிகள், சுய தொழில் புரிபவர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், மற்றும் வயது முதிர்ந்த காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதுக்குப்பின்னால் அணியும் காதொலிக்கருவிகள் வழங்கப்படவுள்ளது.
எனவே காதுக்குப்பின்னால் அணியும் காதொலிக்கருவிகள் பெற விரும்பும் மேற்காணும் தகுதியுடைய கேளாத நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், குடும்ப உணவு வழங்கல் அட்டையின் நகல், படிப்பவர், பணிபுரிபவர், சுயதொழில் புரிபவர்கள் அதற்கான சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட உரிய சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்-14, தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர்-10 என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பித்து காதுக்கு பின்னால் அணியக்கூடிய காதொலிக்கருவி பெற்று பயனடையலாமெனவும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்- 04362-236791-ற்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 11 வயது முதல் 75 வயதுடைய பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் செவித்திறன் குறைவுடைய மாணவ, மாணவிகள், சுய தொழில் புரிபவர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், மற்றும் வயது முதிர்ந்த காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதுக்குப்பின்னால் அணியும் காதொலிக்கருவிகள் வழங்கப்படவுள்ளது.
எனவே காதுக்குப்பின்னால் அணியும் காதொலிக்கருவிகள் பெற விரும்பும் மேற்காணும் தகுதியுடைய கேளாத நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், குடும்ப உணவு வழங்கல் அட்டையின் நகல், படிப்பவர், பணிபுரிபவர், சுயதொழில் புரிபவர்கள் அதற்கான சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட உரிய சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்-14, தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர்-10 என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பித்து காதுக்கு பின்னால் அணியக்கூடிய காதொலிக்கருவி பெற்று பயனடையலாமெனவும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்- 04362-236791-ற்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.