.

Pages

Wednesday, January 18, 2017

சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி ( படங்கள் )

தஞ்சாவூர் மாவட்டம்,  தஞ்சாவூர் திலகர் திடலில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் கொடியசைத்து இன்று (18.01.2017) துவக்கி வைத்தார்.    

இப்பேரணியில் கல்லூரிகளை சேர்ந்த 100 மாணவ மாணவியர்கள், தன்னனார்வ நிறுவனங்களின் தொண்டர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.  இப்பேரணி  திலகர் திடலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியகத்தில் முடிவடைந்தது. பேரணி செல்லும் வழியில் வாகனங்களில் பயணிப்போர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்
 
இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், தஞ்சை போக்குவரக்கழக கோட்ட மேலாளர் சதீஷ்குமார், போக்குவரத்து ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகர், செந்தில்ராம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.