அதிராம்பட்டினம், ஆக.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி கிளையின் உதவியாளராக கடந்த 36 ஆண்டுகள் பணியாற்றி வந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த அயூப்கான் (60), இன்று (ஆக.31) வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, வங்கி கிளை சார்பில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவிற்கு வங்கி கிளை மேலாளர் திருமதி ஆர்.பாலா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தனலட்சுமி வங்கி அதிகாரிகள் வி.சுந்தரேசன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி, சால்வை அணிவித்து, நினைவுப்பரிசுகள் வழங்கினர். மேலும், வங்கி கிளை உதவி மேலாளர் டி. சுரேஷ், அலுவலர்கள் விஷ்வதீப், ரம்யா, சண்முகம், சீதாலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.
முடிவில், அயூப்கான் ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், உறவினர்கள் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி கிளையின் உதவியாளராக கடந்த 36 ஆண்டுகள் பணியாற்றி வந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த அயூப்கான் (60), இன்று (ஆக.31) வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, வங்கி கிளை சார்பில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவிற்கு வங்கி கிளை மேலாளர் திருமதி ஆர்.பாலா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தனலட்சுமி வங்கி அதிகாரிகள் வி.சுந்தரேசன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி, சால்வை அணிவித்து, நினைவுப்பரிசுகள் வழங்கினர். மேலும், வங்கி கிளை உதவி மேலாளர் டி. சுரேஷ், அலுவலர்கள் விஷ்வதீப், ரம்யா, சண்முகம், சீதாலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.
முடிவில், அயூப்கான் ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், உறவினர்கள் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.