.

Pages

Wednesday, August 15, 2018

மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.டி தகளா மரைக்காயர்  பெற்றோர் ஆசிரிய கழகப் பொறுப்பாளர்கள் இப்ராஹீம், முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்திப், சமூக ஆர்வலர் அப்துல் ஹாதி, எம்.எம்.எஸ் இக்பால் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.