.

Pages

Wednesday, August 15, 2018

அதிரையில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 72 வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிரையில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் முதலாம் ஆண்டின் 72-வது இந்திய சுதந்திர தின கொடியேற்றும் விழா காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இன்று புதன்கிழமை காலை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார். எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்) வரவேற்றுப் பேசினார். எம். காதர் முகைதீன் சுதந்திர தின சிற்றுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் டாக்டர் எச். அப்துல் ஹக்கீம் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை ஏ.சாகுல் ஹமீது தொகுத்து வழங்கினார். விழா முடிவில் என்.அபுதாஹிர் நன்றி கூறினார். விழாவையொட்டி, அதிராம்பட்டினம் பிராதான சாலைகளின் 10 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இவற்றை ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க மரக்கன்றை சுற்றி இரும்பிலான வலைக் கூண்டுகள் அமைக்கப்பட்டது.

இவ்விழாவில், அதிராம்பட்டினம் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் செய்துருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.