.

Pages

Sunday, August 12, 2018

அதிரையில் காது கேளாத~ வாய் பேசாதோருக்கான சைகை மொழியில் குர்ஆன் ஒருநாள் பயிற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.12
பேச இயலாத ~ காது கேளாதோருக்கான குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கம் பற்றி சைகை மொழியில் கட்டறியும் ஒருநாள் பயிற்சி வகுப்பு அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்கத் தலைவர் எஸ்.எம்.ஒய் ஹாஜா சரீப் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், கோவை பேச இயலாத ~ காது கேளாதோருக்கான ஒருங்கிணைந்த அமைப்பின் பயிற்றுநர்கள் எஃப். பாசித் ரஹ்மான், ஆர். அஸ்லம் ஆகியோர் கலந்துகொண்டு சைகை மொழி மற்றும் காணொளி மூலம் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் இஸ்லாம் மார்க்கம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்கள்.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பின் பேரில் அப்துல் லத்திப், பஷீர் அகமது, நலச் சங்க துணைத்தலைவர் ஏ.சிராஜுதீன், பொருளாளர் ஆர்.மன்சூர், முன்னாள் நிர்வாகி ஜெஹபர் சாதிக் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பேச இயலாத - காது கேளாதோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 

 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.