.

Pages

Tuesday, August 14, 2018

சேண்டாக்கோட்டை பகுதியில் ஆற்று நீர் வருகை ~ ஆட்சியர் ஆய்வு (படம்)

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம் கல்லணை கால்வாய் ஆற்றுப்பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநருமான ஆனந்த், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் இன்று (14.08.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பட்டுக்கோட்டை ஒன்றியம், சேண்டாக்கோட்டை பகுதியில் ராஜாமடம் வாய்க்காலில் தண்ணீர் வருவதையும், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அடைப்புகள் மற்றும் குப்பைகளை சுத்தப்படுத்தும் பணி  மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) திரு.ஜஸ்டின், கல்லணை கால்வாய் கோட்ட செயற் பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.