அதிராம்பட்டினம் கீழத்தெரு மஹல்லா அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்றம் தொடக்கம். புதிய ஒருங்கிணைப்பாளர்கள் 13 பேர் கொண்ட பெயர் பட்டியல் அறிவிப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், கீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்றம் தொடக்க விழா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு வெள்ளிக்கிழமை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கீழத்தெரு மஹல்லா அல் நூருல் முகம்மதியா சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஒப்புதலின் பேரில், கீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்றம் புதிதாக தொடங்கப்பட்டன. மன்றத்தின் புதிய ஒருங்கிணைப்பாளர்களாக மான் ஏ.சேக், எம்.அஜ்மல் கான், பி.அமானுல்லா சேட், எம்.செய்யது கனி, எம். நிஜாமுதீன் (மீன் மார்க்கெட்), எம்.அகமது அன்வர், எம். அகமது ரிழா, ஜே. முகமது சாலிகு, கே.ஜும்மா, என்.இலியாஸ் முகமது, ஜே.அஸ்கர், ஆர்.இஜாஸ் அகமது, என்.ப்ரோஸ் ஆகிய 13 நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வாழ்த்துகள். பணி தெLர பாராட் டுக்கள்!!!
ReplyDelete