அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழா புதன்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ. முகம்மது முகைதீன் வரவேற்றுப் பேசினார். கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் ஏ. சேக் அப்துல் காதர் சுதந்திர தினவிழா சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில், சிறப்பிடம் பெற்ற தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவர்களுக்கு கல்லூரிச் செயலர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழா முடிவில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியை எஸ். சாபிரா பேகம் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழா புதன்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ. முகம்மது முகைதீன் வரவேற்றுப் பேசினார். கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் ஏ. சேக் அப்துல் காதர் சுதந்திர தினவிழா சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில், சிறப்பிடம் பெற்ற தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவர்களுக்கு கல்லூரிச் செயலர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழா முடிவில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியை எஸ். சாபிரா பேகம் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.