துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவர் 20 ஆண்டுகளாக சொந்த ஊர் திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தர ஈமான் அமைப்புக்கு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி. இவரது கணவர் சேகர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்காக சென்றார். ஆனால் இதுவரை அவர் சொந்த ஊருக்கு திரும்பவில்லை. இவரை தேடுவதற்காக பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.
துபாயில் உள்ள ஈமான் அமைப்பின் மனிதாபிமானப் பணிகள் குறித்து இராமநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பரக்கத் அலி கான் மற்றும் பொறியாளர் நஜுமுதீன் ஆகியோர் மூலம் வள்ளி குடும்பத்தினர் கேள்விப்பட்டனர்.
இதனையடுத்து வள்ளி மற்றும் சேகரின் சகோதரிகள் ஆகியோர் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்திடம் சேகரை கண்டுபிடித்து தங்களது குடும்பத்தினரிடம் மீண்டும் இணைத்து வைக்க கோரிக்கை மனு அளித்தனர்.
இதற்கான முயற்சிகள் துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு சேகர் மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி. இவரது கணவர் சேகர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்காக சென்றார். ஆனால் இதுவரை அவர் சொந்த ஊருக்கு திரும்பவில்லை. இவரை தேடுவதற்காக பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.
துபாயில் உள்ள ஈமான் அமைப்பின் மனிதாபிமானப் பணிகள் குறித்து இராமநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பரக்கத் அலி கான் மற்றும் பொறியாளர் நஜுமுதீன் ஆகியோர் மூலம் வள்ளி குடும்பத்தினர் கேள்விப்பட்டனர்.
இதனையடுத்து வள்ளி மற்றும் சேகரின் சகோதரிகள் ஆகியோர் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்திடம் சேகரை கண்டுபிடித்து தங்களது குடும்பத்தினரிடம் மீண்டும் இணைத்து வைக்க கோரிக்கை மனு அளித்தனர்.
இதற்கான முயற்சிகள் துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு சேகர் மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.