.

Pages

Thursday, August 30, 2018

தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சீரான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு வசதி, கழிவறை வசதி மற்றும் பசுமை வீடுகள் தொடர்பான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று (30.08.2018) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: -
தஞ்சாவூர் மாவட்டத்தில்  மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 589 ஊராட்சிகளிலும் குடிநீர் விநியோகம் சீராக பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் வார்டுகளில் தினமும் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படுகிறதா என்பதை துறை அலுவலர்கள் காலையில் ஆய்வு செய்ய வேண்டும்.  பேருந்து நிலையங்களில் தூய்மையை பராமரித்து சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.  பேருந்து நிலையங்களில் சுகாதாரமற்ற நிலை தென்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  விதிமுறைக்கு புறம்பாக மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதை தடுத்து, மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில்  குடிநீர் பிரச்சினை ஏற்படா வண்ணம் அந்தந்த பகுதியை சேர்ந்த அலுவலர்கள், தேவையான இடத்தில் மாற்று குடிநீர் ஆதாரம் செய்து கொடுக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்தி தேவையான இடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். 

குடிநீர் தொடர்பாக அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறு மற்றும் நீர் ஆதாரம் தொடர்பான எம்.புக்கு சரியாக பராமரிக்க வேண்டும்.  குடிநீர் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் விளம்பர பலகை வைக்க வேண்டும்.  விளம்பர பலகையில் ஊராட்சியின் பெயர், செய்யப்படும் பணியின் பெயர், திட்ட மதிப்பீடு, ஒப்பந்ததாரர் பெயர், பணிகள் முடிக்க வேண்டிய காலம் போன்ற விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் பொது மக்களுக்கு அரசு செய்து வரும் பணிகள் தெரியும். அனைத்து பகுதிகளில்  தெரு விளக்குகள் சரியாக பயன்பாட்டில் உள்ளதா என இரவு நேரங்களில் ரோந்து பணிமேற்கொண்டு தெரு விளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும். அதே போல கிராம இணைப்பு சாலைகள் முறையாக சீரமைத்து அனைத்து சாலைகளும் தரமாக அமைக்கப்பட வேண்டும். சுகாதார வளாகங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொது மக்கள் பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்கள் கணக்கெடுத்து அவற்றை முறையாக பராமரித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பசுமை வீடுகள் திட்டத்தின் நடைபெறும் பணிகளை துர்pதப்படுத்தி விரைவாக அனைத்து பணிகளை முடிக்க வேண்டும்.  வருகின்ற பருவமழையை முன்னிட்டு மழை நீர் தேங்கா வண்ணம் மழை நீர் வடிகால் சுத்தம் செய்ய வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் (பொ) காளிமுத்து, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையர்கள் உமாமகேஸ்வரி (கும்பகோணம்), ஷேக் அலாவுதீன் (பட்டுக்கோட்டை)  செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், பேரூரட்சிகளின் செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.