தஞ்சாவூர் மாவட்டம், பருவ மழை காலத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளை ஆளில்லா சிறு விமானம் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றாக இருப்பதாலும், டெல்டா மாவட்டமாக இருப்பதாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பருவ மழைக் காலத்தில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆணையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடிய ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வானிலை ஆய்வுத்துறை மாணவர்களை கொண்டு ஆளில்லா சிறு விமானம் மூலம் துல்லியமாக அளவிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணியின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், அக்னியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றாக இருப்பதாலும், டெல்டா மாவட்டமாக இருப்பதாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பருவ மழைக் காலத்தில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆணையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடிய ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வானிலை ஆய்வுத்துறை மாணவர்களை கொண்டு ஆளில்லா சிறு விமானம் மூலம் துல்லியமாக அளவிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணியின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், அக்னியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.