.

Pages

Thursday, August 30, 2018

உலமா சபை சார்பில் கேரளத்துக்கு ரூ.2.45 லட்சம் வெள்ள நிவாரண நிதி அனுப்பி வைப்பு!

தஞ்சாவூர், ஆக.30-
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு நிவாரணம்  வழங்குவதற்காக, தஞ்சாவூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மூலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையாளிகளிடம் வசூலிக்கப்பட்ட நிதி ரூ. 2.45 லட்சம், தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி. காதர் ஹுசைன் அவர்களிடம் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்மாநில ஜமாத்துல் உலமா சபை அறிவுறுத்தலின் பேரில், தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மூலம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களின் ஜும்மா தொழுகையின் போது தொழுகையாளிகளிடம் திரட்டப்பட்ட மொத்தம் நிதி ரூ. 2.45 லட்சத்தை, தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி. காதர் ஹுசைன் அவர்களிடம், தஞ்சை மாவட்ட  ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லவி. எஸ். அயூப்கான் மன்பஈ, பொருளாளர் மவ்லவி எம். ஹாஜா முகைதீன் மிஸ்பாஹி, மவ்லவி எஸ். முகமது சிராஜுதீன் ஆகியோர் வழங்கி மாநில மாநில ஜமாத்துல் உலமா சபை மூலம் அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.