அதிராம்பட்டினம், ஆக.18
அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் புதிதாக 'அல் மதரஸத்துல் இஸ்லாமியா' என்ற பெயரில் குர்ஆன் ஓதும் பயிற்சியின் தொடக்கம் சனிக்கிழமை மாலை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி ஏ. நெய்னா முகமது தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். பள்ளிவாசல் இமாம் மவ்லவி. நாசர் கிராத் ஓதி விழாவைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளார்களாக, மக்தப் மதரசா அதிராம்பட்டினம் சென்டர் பொறுப்பாளர் முஃப்தி அப்துல் ஹாதி பாகவி, மக்தப் மதரசா ஆசிரியர்கள் மவ்லவி. இத்ரீஸ், மவ்லவி. நஜ்முதீன் ஆகியோர் கலந்துகொண்டு, குர்ஆன் கற்றலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
முன்னதாக, எம். அகமது சிராஜுதீன் வரவேற்றுப் பேசினார். பள்ளிவாசல் இமாம் மவ்லவி. எச். முகமது இப்ராஹீம் தாவூதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விழாவில், மாணவர்கள் புதிய சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. தினமும் மாலை அஸர் தொடங்கி, மஹ்ரிப் தொழுகை வரை குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில், குர்ஆன் பார்த்து ஓதுதல், துஆ மனனம், சூரா மனனம், எழுத்துப்பயிற்சி போன்றவை கற்பிக்கப்பட உள்ளன. இவ்விழாவில், மஹல்லாவாசிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் புதிதாக 'அல் மதரஸத்துல் இஸ்லாமியா' என்ற பெயரில் குர்ஆன் ஓதும் பயிற்சியின் தொடக்கம் சனிக்கிழமை மாலை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி ஏ. நெய்னா முகமது தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். பள்ளிவாசல் இமாம் மவ்லவி. நாசர் கிராத் ஓதி விழாவைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளார்களாக, மக்தப் மதரசா அதிராம்பட்டினம் சென்டர் பொறுப்பாளர் முஃப்தி அப்துல் ஹாதி பாகவி, மக்தப் மதரசா ஆசிரியர்கள் மவ்லவி. இத்ரீஸ், மவ்லவி. நஜ்முதீன் ஆகியோர் கலந்துகொண்டு, குர்ஆன் கற்றலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
முன்னதாக, எம். அகமது சிராஜுதீன் வரவேற்றுப் பேசினார். பள்ளிவாசல் இமாம் மவ்லவி. எச். முகமது இப்ராஹீம் தாவூதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விழாவில், மாணவர்கள் புதிய சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. தினமும் மாலை அஸர் தொடங்கி, மஹ்ரிப் தொழுகை வரை குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில், குர்ஆன் பார்த்து ஓதுதல், துஆ மனனம், சூரா மனனம், எழுத்துப்பயிற்சி போன்றவை கற்பிக்கப்பட உள்ளன. இவ்விழாவில், மஹல்லாவாசிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.