அதிராம்பட்டினம், ஆக.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு மேலத்தெரு மேற்கு பகுதியில், சுமார் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதியில் பின்தங்கி காணப்படும் இப்பகுதியில், மழைநீர் வடிகால், சாலை போன்ற வசதிகள் இல்லாததால், மழை காலத்தில் இப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி, சேரும் சகதியுமாக காட்சியளிக்கும். பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள், பள்ளிவாசலுக்கு செல்லும் தொழுகையாளிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், இப்பகுதியில் புதிததாக தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி அப்பகுதியினர் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் இன்று வியாழக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியது;
'கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் குடிநீர் கட்டணம், வீடு வரியை முறையாக செலுத்தி வருகிறோம். எனினும், அடிப்படை கட்டமைப்பு வசதியில் இப்பகுதி மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவில் உள்ளது. இப்பகுதியில் புதிததாக தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் மனு அளித்தோம். அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக, மழை நீர் வடிகால் மற்றும் புதிய தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு மேலத்தெரு மேற்கு பகுதியில், சுமார் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதியில் பின்தங்கி காணப்படும் இப்பகுதியில், மழைநீர் வடிகால், சாலை போன்ற வசதிகள் இல்லாததால், மழை காலத்தில் இப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி, சேரும் சகதியுமாக காட்சியளிக்கும். பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள், பள்ளிவாசலுக்கு செல்லும் தொழுகையாளிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், இப்பகுதியில் புதிததாக தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி அப்பகுதியினர் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் இன்று வியாழக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியது;
'கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் குடிநீர் கட்டணம், வீடு வரியை முறையாக செலுத்தி வருகிறோம். எனினும், அடிப்படை கட்டமைப்பு வசதியில் இப்பகுதி மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவில் உள்ளது. இப்பகுதியில் புதிததாக தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் மனு அளித்தோம். அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக, மழை நீர் வடிகால் மற்றும் புதிய தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.