.

Pages

Friday, August 17, 2018

அதிரையில் குர்பானி ஆடு கிலோ ரூ.250 க்கு விற்பனை!

அதிராம்பட்டினம், ஆக.17
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானி இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வது இப்பண்டிகையின் சிறப்பாகும்.

ஹஜ் பெருநாள் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி விவசாயிகளிடமிருந்து ஏராளமான செம்மறி ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து அதிரை நகரிலுள்ள வர்த்தகப் பகுதிகளில் விற்பனைக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதிராம்பட்டினம், காட்டுப்பள்ளி பெண்கள் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள நிஜாம் மட்டன் ஸ்டாலில், குர்பானி ஆடு ரூ. 250 க்கு விற்பனையாகிறது. குர்பானி ஆடுகளை வாடிக்கையாளர்கள் போட்டிக் போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து நிஜாம் மட்டன் ஸ்டால் உரிமையாளர் கே. ராஜிக் முகமது கூறியது;
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானி இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வார்கள்.

ஹஜ் பெருநாள் பண்டிகை நெருங்கிவிட்டதை அடுத்து, எங்களது கடையில் செம்மறி ஆடுகள் விற்பனை தொடங்கிவிடும். தினமும் வாடிக்கையாளர்கள் ஆடுகளை பார்ப்பதற்காக திடலில் மேயவிடுவோம். இவற்றைப் பார்வையிடும் வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான ஆடுகளைத் தேர்வு செய்து விலைக்கு வாங்கிச் செல்வர். சராசரியாக 16 முதல் 30 கிலோ வரை எடைகொண்ட குர்பானி ஆடுகள் விற்பனைக்கு உள்ளது. காலை நேரத்தில் கிலோ ரூ. 270 க்கும், மாலை நேரத்தில் கிலோ ரூ. 250 க்கும் விற்கப்படுகிறது. இந்த விற்பனை ஹஜ் பெருநாள் பண்டிகை நாளான ஆக. 22-ம் தேதி வரை தொடரும் என்றார்.

தொடர்புக்கு: 
9943447195 / 9543612716 / 9943447196 / 9943447197
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.