 |
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கு, முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் கோரிக்கை. கடந்த (23-07-2018 ) ஜூலை ந் தேதி மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீர் நிலை பாதுக்கப்பு அறக்கட்டளை சார்பில் 25 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கோரிக்கை மனு ( Petition No: 2018/9005/21/526621/0723 ) அளித்தனர்.
இப்பகுதிக்கு தண்ணீர் வழங்குதில் தாமதம் ஏற்பட்டதால் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் 40 பேர் திரண்டு வந்து, மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இன்று (ஆக.13) திங்கட்கிழமை மீண்டும் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்கள், அதிராம்பட்டினம் பகுதிக்கு தேவையான தண்ணீர் திறந்துவிட உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்.
இதன் பின்னர், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பரசன் ஆகியோரிடம் தனித்தனியே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு தேவையான அளவு ஆற்று நீர் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.
நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், சமூக ஆர்வலர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஏ.எஸ் அகமது ஜலீல், எம்.நிஜாமுதீன், என்.அபுதாஹிர், கோ.மருதையன், எம். இஷ்ஹாக், டி.ஏ அகமது அனஸ், ஏ. அகமது ஹாஜா, மு.காதர் முகைதீன், எம்.ஏ அப்துல் ஜப்பார், எம். அப்துல் நாசர், எம். அப்துல் மாலிக், செய்யது முகமது புஹாரி, அகமது அஸ்லம், எஸ். அப்துல் பரகத், ஏ.எச் அமானுல்லா, எம்.கே.எம் ஹாஜா முகைதீன், எம். முகமது உமர், சம்சுதீன், ஜவாஹிர், ஏ.சாகுல்ஹமீது, ஏ.முகமது முகைதீன், ஏ.சேக் அலி, சே. அப்துல் காதர், எஸ். முகைதீன் அப்துல் காதர், ஹாஜா முகைதீன், ஹசன், ஜுபைர், ஏ. அகமது கபீர், மற்றும் எம். வீரையன், காந்தி நகர் பஞ்சாயத் தலைவர் கே. காமாட்சி, ஆர்.தவமணி, ஏ.முனியாண்டி ஆகியோர் உடன் சென்று மனுக்களை அளித்தனர்.
 |
மாவட்ட ஆட்சியரத்தில் கோரிக்கை வைத்த போது |
 |
தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தபோது |
|
 |
கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில்
|
|
 |
கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில்
|
 |
மனு அளிப்பதற்காக அதிரையிலிருந்து புறப்பட்டு சென்ற போது |
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.