அதிராம்பட்டினம், ஆக. 25
அதிராம்பட்டினம் அடுத்து வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சி ஏரியை இருசக்கர வாகனத்தில் சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் சனிக்கிழமை காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது;
'டெல்டா பகுதியின் கடைமடைப் பகுதிகளில் காணப்படும் ஏரி, குளங்கள், விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டை இருண்ட ஆண்டாகக் கருதுகின்றனர்.
தமிழக அரசு விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை. பொறுப்பில்லாமல் செயல்படுகின்றன. ஒருபுறம் 120 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துவிட்டது. மறுபுறம் தண்ணீர் திறந்துவிட்டு 30 நாட்களுக்கு மேலாகியும், கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், விவசாயிகள் போராடி வருகின்றனர். முதல்வர் மற்றும் அத்துறையைச் சார்ந்தவர்கள் விவசாயிகளுக்கு பதில் கூறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இதன் காரணமாக, டெல்டாவில் 25 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி இன்றைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. டெல்டா விவசாயிகள் மிகுந்த வேதனையோடு இருக்கின்றனர். 100 டி.எம்.சி தண்ணீர் வீணாகாமல் தடுக்க பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணையை உடனே கட்டவேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுக்கவேண்டும். விதை நெல் முழுமையாக இலவசமாக தரவேண்டும், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சாகுபடி செலவுக்கு மானியமாக விவசாயிகளுக்கு தரவேண்டும், தூர் வாரும் பணியை முறையாக செயல்படுத்த வேண்டும், கடைமடைப் பாசனத்திற்கு உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும்.
320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி, வடுவூர் ஏரி போன்றவை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவது, தமிழக அரசின் நீர் மேலாண்மையின் மோசமான செயல்பாடுதான் காரணம். உடனடியாக கடைமடைப்பகுதி மக்களின் பாசனத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
முன்னதாக, வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சியில், ஜி.கே வாசன், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டனர். மேலும், விவசாயிகள், பெண்கள் வைத்த கோரிக்கைகளை ஜி.கே வாசன் கேட்டறிந்தார். இதன்பின்னர், வறண்டு காணப்படும் அதிராம்பட்டினம் ஆலடிக்குளம், ஏரிப்புறக்கரை ஏரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, தமாகா பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஏ.கே.குமார், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், எம்.எம்.எஸ் குடும்பத்தார் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், விவசாயிகள், பெண்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிராம்பட்டினம் அடுத்து வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சி ஏரியை இருசக்கர வாகனத்தில் சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் சனிக்கிழமை காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது;
'டெல்டா பகுதியின் கடைமடைப் பகுதிகளில் காணப்படும் ஏரி, குளங்கள், விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டை இருண்ட ஆண்டாகக் கருதுகின்றனர்.
தமிழக அரசு விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை. பொறுப்பில்லாமல் செயல்படுகின்றன. ஒருபுறம் 120 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துவிட்டது. மறுபுறம் தண்ணீர் திறந்துவிட்டு 30 நாட்களுக்கு மேலாகியும், கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், விவசாயிகள் போராடி வருகின்றனர். முதல்வர் மற்றும் அத்துறையைச் சார்ந்தவர்கள் விவசாயிகளுக்கு பதில் கூறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இதன் காரணமாக, டெல்டாவில் 25 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி இன்றைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. டெல்டா விவசாயிகள் மிகுந்த வேதனையோடு இருக்கின்றனர். 100 டி.எம்.சி தண்ணீர் வீணாகாமல் தடுக்க பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணையை உடனே கட்டவேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுக்கவேண்டும். விதை நெல் முழுமையாக இலவசமாக தரவேண்டும், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சாகுபடி செலவுக்கு மானியமாக விவசாயிகளுக்கு தரவேண்டும், தூர் வாரும் பணியை முறையாக செயல்படுத்த வேண்டும், கடைமடைப் பாசனத்திற்கு உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும்.
320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி, வடுவூர் ஏரி போன்றவை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவது, தமிழக அரசின் நீர் மேலாண்மையின் மோசமான செயல்பாடுதான் காரணம். உடனடியாக கடைமடைப்பகுதி மக்களின் பாசனத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
முன்னதாக, வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சியில், ஜி.கே வாசன், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டனர். மேலும், விவசாயிகள், பெண்கள் வைத்த கோரிக்கைகளை ஜி.கே வாசன் கேட்டறிந்தார். இதன்பின்னர், வறண்டு காணப்படும் அதிராம்பட்டினம் ஆலடிக்குளம், ஏரிப்புறக்கரை ஏரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, தமாகா பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஏ.கே.குமார், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், எம்.எம்.எஸ் குடும்பத்தார் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், விவசாயிகள், பெண்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.