அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 15
இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் தலைமை வகித்த, பள்ளி கல்விக்குழு தலைவர் முன்னாள் கவுன்சிலர் எம். முகம்மது சரீப் இந்திய தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் தலைமை ஆசிரியருமாகிய எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் டேவிட் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.
விழாவில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் என்.எம் முகம்மது ஹனீபா, நிருபர் ஏ.சாகுல் ஹமீது, எம். இசட் அப்துல் மாலிக், எம்.ஆர் ஜமால் முஹமது, மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் தலைமை வகித்த, பள்ளி கல்விக்குழு தலைவர் முன்னாள் கவுன்சிலர் எம். முகம்மது சரீப் இந்திய தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் தலைமை ஆசிரியருமாகிய எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் டேவிட் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.
விழாவில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் என்.எம் முகம்மது ஹனீபா, நிருபர் ஏ.சாகுல் ஹமீது, எம். இசட் அப்துல் மாலிக், எம்.ஆர் ஜமால் முஹமது, மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.