![]() |
கோப்புப் படம் |
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணி அதிராம்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கேரளாவில் பெய்த பலத்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அன்றாடப் பணிகள் முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகமெங்கும் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசல்களில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜும்மா தொழுகையில் வெள்ளம் நிவாரண நிதி திரட்டும் பணி நடைபெற்றது.
இதில், TNTJ அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில், ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் ரூ.11,600 கிளை-2 சார்பில், சிஎம்பி லேன் மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசலில் ரூ.12,600 , கிளை-3 சார்பில், மேலத்தெரு சாணாவயல் மஸ்ஜித் அல் ஹிதாயா பள்ளிவாசலில் ரூ.3,300 நிதி திரட்டப்பட்டது. நிதி ரூ. 27,500 அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில தலைமை மூலம் உடனடியாக விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.