அதிராம்பட்டினம், ஆக.19
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மீள, அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லிஸில் சிறப்பு பிரார்த்தனை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது நாள் நிகழ்ச்சிக்கு, அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ. முஹம்மது நெய்னா ஆலிம் தலைமை வகித்தார். கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. சபியுல்லா அன்வாரி இஸ்லாமிய மார்க்க சிறப்புரை நிகழ்த்தினார்.
முடிவில், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன் கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மீளவும், வறண்டு காணப்படும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பொழியவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியப் பொதுமக்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டி செய்துவருகின்றனர். இதன் நிறைவு விழா எதிர்வரும் 06-09-2018 அன்று வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது.
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மீள, அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லிஸில் சிறப்பு பிரார்த்தனை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது நாள் நிகழ்ச்சிக்கு, அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ. முஹம்மது நெய்னா ஆலிம் தலைமை வகித்தார். கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. சபியுல்லா அன்வாரி இஸ்லாமிய மார்க்க சிறப்புரை நிகழ்த்தினார்.
முடிவில், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன் கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மீளவும், வறண்டு காணப்படும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பொழியவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியப் பொதுமக்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டி செய்துவருகின்றனர். இதன் நிறைவு விழா எதிர்வரும் 06-09-2018 அன்று வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.