தஞ்சாவூர், ஆக. 20
சுகாதார சீர்கேட்டை தவிர்க்க நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த அதிரை மேம்பாட்டுச் சங்கமம் ஆட்சியரகத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியின் சமூக மேம்பாடு, ஒற்றுமை, அடிப்படை கட்டமைப்பு வசதியில் தன்னிறைவு போன்ற திட்டங்களை பிரதான நோக்கமாகக் கொண்டு 'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' என்ற அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.
இவ்வமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் தலைமையில், அவ்வமைப்பினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இன்று (ஆக.20) திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்கள், கும்பகோணம் நகராட்சியில், புதிய திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது போல், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் புதிய திட்டத்தை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்.
இதன் பின்னர், மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் விஸ்வநாதன் (பொறுப்பு) அவர்களின் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டன.
இதில், அமைப்பின் பொருளாளர் ஏ.மகபூப் அலி, சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஏ.முனாப், துணைச்செயலாளர் எல்.எம்.எஸ் முகமது யூசுப், எம். நிஜாமுதீன், ஒருங்கிணைப்பாளர் அகமது அமீன், கே.எம்.என் முகமது மாலிக், கே. சரபுதீன், முகமது அலியார், இம்தியாஸ் அகமது, பஷீர் அகமது, அகமது அனஸ், ரிஜ்வான், அபுல் ஹசன், முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுகாதார சீர்கேட்டை தவிர்க்க நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த அதிரை மேம்பாட்டுச் சங்கமம் ஆட்சியரகத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியின் சமூக மேம்பாடு, ஒற்றுமை, அடிப்படை கட்டமைப்பு வசதியில் தன்னிறைவு போன்ற திட்டங்களை பிரதான நோக்கமாகக் கொண்டு 'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' என்ற அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.
இவ்வமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் தலைமையில், அவ்வமைப்பினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இன்று (ஆக.20) திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்கள், கும்பகோணம் நகராட்சியில், புதிய திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது போல், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் புதிய திட்டத்தை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்.
இதன் பின்னர், மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் விஸ்வநாதன் (பொறுப்பு) அவர்களின் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டன.
இதில், அமைப்பின் பொருளாளர் ஏ.மகபூப் அலி, சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஏ.முனாப், துணைச்செயலாளர் எல்.எம்.எஸ் முகமது யூசுப், எம். நிஜாமுதீன், ஒருங்கிணைப்பாளர் அகமது அமீன், கே.எம்.என் முகமது மாலிக், கே. சரபுதீன், முகமது அலியார், இம்தியாஸ் அகமது, பஷீர் அகமது, அகமது அனஸ், ரிஜ்வான், அபுல் ஹசன், முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.