அதிராம்பட்டினம், ஆக.
அதிரை ஈத் கமிட்டி சார்பாக இந்த வருட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சுன்னத்தான முறையில் சானா வயல் திடலில் நடைபெற்றது. பெருநாள் தொழுகையை நடத்தி பெருநாள் குத்பா பேருரையை மவ்லவி. அப்துல் ரஹ்மான் ஷிப்லி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
ஏராளமான ஆண்களிம் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில் நபி இப்ராஹீம் அலை அவர்களின் ஏகத்துவ உறுதியும், இன்றைய நவீன இசங்கள் மற்றும் நாத்திக நாசாங்களுக்கு முன் நமக்கு இருக்க வேண்டிய உறுதியும் ஒப்பிடப்பட்டு விளக்கப்பட்டது.
இந்த ஹஜ் பெருநாள் திடல் தொழுகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை ஈத் கமிட்டியினர் செய்திருந்தனர். குறிப்பாக கடந்த ஈகைத் திருநாளின் போது ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தவிர்க்கப்பட்டிருந்தன, அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்வானாக.
பெருநாள் தொழுகை நிறைவடைந்த பின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்கூறிக் கொண்டதுடன் குரூப் செல்ஃ பிகளும் எடுத்துக் கொண்டனர்.
தகவல்: அதிரை அமீன்
படங்கள்: நஜி
அதிரை ஈத் கமிட்டி சார்பாக இந்த வருட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சுன்னத்தான முறையில் சானா வயல் திடலில் நடைபெற்றது. பெருநாள் தொழுகையை நடத்தி பெருநாள் குத்பா பேருரையை மவ்லவி. அப்துல் ரஹ்மான் ஷிப்லி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
ஏராளமான ஆண்களிம் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில் நபி இப்ராஹீம் அலை அவர்களின் ஏகத்துவ உறுதியும், இன்றைய நவீன இசங்கள் மற்றும் நாத்திக நாசாங்களுக்கு முன் நமக்கு இருக்க வேண்டிய உறுதியும் ஒப்பிடப்பட்டு விளக்கப்பட்டது.
இந்த ஹஜ் பெருநாள் திடல் தொழுகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை ஈத் கமிட்டியினர் செய்திருந்தனர். குறிப்பாக கடந்த ஈகைத் திருநாளின் போது ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தவிர்க்கப்பட்டிருந்தன, அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்வானாக.
பெருநாள் தொழுகை நிறைவடைந்த பின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்கூறிக் கொண்டதுடன் குரூப் செல்ஃ பிகளும் எடுத்துக் கொண்டனர்.
படங்கள்: நஜி
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.