.

Pages

Thursday, August 16, 2018

சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வித் உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருப்பதாவது;
மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்யலாம். அரசு/அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள், 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களும், தொழிற்கல்வி  மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாயின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம்.   மத்திய அரசின் www.scholarship.gov.in என்ற இணைய தளத்தின்  (NSP) மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய விரிவான விவரங்களை http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm. மற்றும் http://www.minorityaffairs.gov.in ஆகிய இணையதளங்களில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.