.

Pages

Sunday, August 26, 2018

அதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் TARATDAC அமைப்பினர் வைத்திலிங்கத்தை சந்தித்து கோரிக்கை!

தஞ்சாவூர், ஆக.26
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் (TARATDAC) இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இரு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியக்கூடிய மாற்றுத்திறனாளி பணியாளர்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என 2008 ஆம் ஆண்டு அரசாணை எண் 151-இல் இருந்தும், இதுவரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பருவகால மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
எனவே, அரசாணைப்படி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தலைவர் ஏ. பஹாத்அகமது தலைமையில், அவ்வமைப்பினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வதாக அவர்களிடம் கூறினாராம்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.