அதிராம்பட்டினம், ஆக.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியின் சமூக மேம்பாடு, ஒற்றுமை, அடிப்படை கட்டமைப்பு வசதியில் தன்னிறைவு போன்ற திட்டங்களை பிரதான நோக்கமாகக் கொண்டு 'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' என்ற அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின், செயற்குழு ஆலோசனைக் கூட்டம் அதன் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் தலைமை வகித்த உரை நிகழ்த்தினார். செயலாளர் ஏ.ஜே அஸ்ரப் அலி அமைப்பின் நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். பொருளாளர் ஏ.மகபூப் அலி அமைப்பின் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவதற்கு உண்டான வழிமுறைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் பற்றி பேசப்பட்டது.
முன்னதாக, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வஜீர் அலி வரவேற்றுப் பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் அகமது அமீன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், பேராசிரியர் அப்துல் காதர், கவியன்பன் கலாம், சாகுல் ஹமீது, சரபுதீன், நிஜாமுதீன், முகமது மாலிக், முகமது சிராஜுதீன், அப்துல் கரீம், முகமது முகைதீன், ஜபருல்லாஹ், அதிரை பாருக், பஷீர் அகமது, ரெஜிஸ்கான், முகமது யூசுப், ரிழா, இஸ்மாயில் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பின் வெளிநாடு வாழ் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியின் சமூக மேம்பாடு, ஒற்றுமை, அடிப்படை கட்டமைப்பு வசதியில் தன்னிறைவு போன்ற திட்டங்களை பிரதான நோக்கமாகக் கொண்டு 'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' என்ற அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின், செயற்குழு ஆலோசனைக் கூட்டம் அதன் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் தலைமை வகித்த உரை நிகழ்த்தினார். செயலாளர் ஏ.ஜே அஸ்ரப் அலி அமைப்பின் நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். பொருளாளர் ஏ.மகபூப் அலி அமைப்பின் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவதற்கு உண்டான வழிமுறைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் பற்றி பேசப்பட்டது.
முன்னதாக, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வஜீர் அலி வரவேற்றுப் பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் அகமது அமீன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், பேராசிரியர் அப்துல் காதர், கவியன்பன் கலாம், சாகுல் ஹமீது, சரபுதீன், நிஜாமுதீன், முகமது மாலிக், முகமது சிராஜுதீன், அப்துல் கரீம், முகமது முகைதீன், ஜபருல்லாஹ், அதிரை பாருக், பஷீர் அகமது, ரெஜிஸ்கான், முகமது யூசுப், ரிழா, இஸ்மாயில் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பின் வெளிநாடு வாழ் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.