.

Pages

Thursday, August 23, 2018

தஞ்சை மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக 01.09.2018 முதல் 31.10.2018 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருப்பதாவது: -
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வருகின்ற 01-09-2018 முதல் 31-10-2018 வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக தகுதியான வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்ங்கள் பெறப்படவுள்ளது,

தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட காலவரையில் 01-01-2019 ஐ தகுதி நாளாகக் கொண்டு 18- வயது நிரம்பிய (31-12-2000 வரை பிறந்தவர்கள்) ஆண், பெண் இருபாலரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் 6 ஐ பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆதார ஆவண நகல்களுடன் (பிறந்த தேதி மற்றும் இருப்பிடத்திற்கான ஆதாரம்)  வாக்குச்சாவடி அலுவலரிடம் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், 

மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிதாக பெயர் சேர்க்க படிவம்  6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மூலம்), பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 ஐயும். பெயர், முகவரி போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8 ஐயும். ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலாpடம் அளிக்கலாம்,

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை  இருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பொது மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்,  இவ்வாய்ப்பினை வாக்காளர்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், 01-09-2018 முதல் 31-10-2018 வரை வாக்காளர்களிடமிருந்து கேட்புரிமம் மற்றும் ஆட்சேபணைகள் பெறும் முகாமும், 08-09-2018, 22-09-2018, 06-10-2018 மற்றும் 13-10-2018 தேதிகளில் கிராம சபை மற்றும் உள்ளாட்சி அலுவலக’;களில் வாக்காளர் பட்டியலினை வாசித்து காண்பிக்கும் பணியும். 09-09-2018, 23-09-2018, 07-10-2018 மற்றும் 14-10-2018 தேதிகளில் அனைத்து வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெறும்.

எனவே, இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, 01-01-2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்த   அனைவரும் மேற்குறிப்பிட்ட நாட்களில் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்படுகிறது. 

வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மு்லமாக பெயர் சேர்க்க றாற.நடநஉவiடிளே.வn.படிஎ.in  என்ற இணைய தள முகவரியில்  விண்ணப்பிக்கலாம். என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.