.

Pages

Sunday, August 26, 2018

வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் காதிர் முகைதீன் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது!

அதிராம்பட்டினம், ஆக.26
பட்டுக்கோட்டை வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வென்றது.

பட்டுக்கோட்டை வட்ட அளவிலான, 51 வது ஆண்டு குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகள், கடந்த ஆக.23, 24, 25 ஆகிய 3 தினங்கள் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில், தடகளப் போட்டிகளில், 60 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 700 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

போட்டிகளை, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், மாவட்ட கல்வி அலுவலர் கே.பாண்டியன், மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் ஏ.தேன்மொழி, பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸரப் அலி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டி முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆண்கள் பிரிவில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 105 புள்ளிகள் பெற்று முதலிடமும், பட்டுக்கோட்டை புனித தாமஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 64 புள்ளிகள் பெற்று இரண்டாமிடமும், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 37 புள்ளிகள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தது. பெண்கள் பிரிவில், வெட்டுவாக்கோட்டை அரசு  மேல்நிலைப்பள்ளி 89 புள்ளிகள் பெற்று முதலிடமும், பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 72 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், ஊரணிபுரம் ஸ்ரீ கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி 42 புள்ளிகள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தது. இதில், 105 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

பரிசுகளை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், முன்னாள் உடற்கல்வி இயக்குநர் (ஓய்வு) டி. ரவிச்சந்தர், உடற்கல்வி ஆசிரியர் (ஓய்வு) ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர். தர்மலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

விழா ஏற்பாட்டினை, பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸரப் அலி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ. ராஜா, ஏ.ஜெயகாந்தன் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர். நிகழ்ச்சியினை பள்ளி தமிழ் ஆசிரியர் மு. உமர் பாருக் தொகுத்து வழங்கினார். முடிவில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.நாகராஜன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  
 
  
 
 
 
  
 
  
 
 
  
 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.