தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைமடை பகுதிகளில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (11.08.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேராவ10ரணி வட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், புதுப்பட்டினம் பிரதான வாய்க்காலிலிருந்து எட்டிவெளி ஏரிக்கு தண்ணீர் செல்வதையும், கட்டயங்காடு, நடுவிக்குறிச்சி, பள்ளத்தூர் ஊராட்சிகள் வழியாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குருவிக்கரம்பை ஊராட்சியில் ஐந்தாம் எண் வாய்க்காலில் தண்ணீர் செல்வதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அப்பகுதி விவசாயிகள் தற்போது வாய்க்காலில் 30 கன மீட்டர் தண்ணீர் வருவதாகவும், 60 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை விடுத்தனர். ஓரிரு நாட்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகளிடம் தெரிவித்தார். தொடர்ந்து ஆத்தலூர் வடக்கு பகுதியில் சேதுபாவாசத்திரம் பிரதான கால்வாயிலிருந்து ஐந்தாம் எண் தலைப்பு வாய்க்கால் பிரிவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பேராவூரணி வட்டம், பெரியகுளம் ஏரியை பார்வையிட்டு ஏரியில் காய்ந்து கிடக்கும் முட்புதர்கள், செடி கொடிகளை அகற்றிடவும், ஈச்சன்விடுதி ஊராட்சியில் கல்லணைக் கால்வாயிலிருந்து புதுப்பட்டினம் வாய்க்கால் தலைப்பு பகுதியில் தண்ணீர் திறந்துவிடப்படும் அளவு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஆய்வின் போது பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தராசு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திருஞானசம்பந்தம்,முன்னாள் நிலவள வங்கித் தலைவர் துரைமாணிக்கம், கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன், பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் நாராயணசாமி, ரசன்னா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பேராவ10ரணி வட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், புதுப்பட்டினம் பிரதான வாய்க்காலிலிருந்து எட்டிவெளி ஏரிக்கு தண்ணீர் செல்வதையும், கட்டயங்காடு, நடுவிக்குறிச்சி, பள்ளத்தூர் ஊராட்சிகள் வழியாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குருவிக்கரம்பை ஊராட்சியில் ஐந்தாம் எண் வாய்க்காலில் தண்ணீர் செல்வதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அப்பகுதி விவசாயிகள் தற்போது வாய்க்காலில் 30 கன மீட்டர் தண்ணீர் வருவதாகவும், 60 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை விடுத்தனர். ஓரிரு நாட்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகளிடம் தெரிவித்தார். தொடர்ந்து ஆத்தலூர் வடக்கு பகுதியில் சேதுபாவாசத்திரம் பிரதான கால்வாயிலிருந்து ஐந்தாம் எண் தலைப்பு வாய்க்கால் பிரிவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பேராவூரணி வட்டம், பெரியகுளம் ஏரியை பார்வையிட்டு ஏரியில் காய்ந்து கிடக்கும் முட்புதர்கள், செடி கொடிகளை அகற்றிடவும், ஈச்சன்விடுதி ஊராட்சியில் கல்லணைக் கால்வாயிலிருந்து புதுப்பட்டினம் வாய்க்கால் தலைப்பு பகுதியில் தண்ணீர் திறந்துவிடப்படும் அளவு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஆய்வின் போது பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தராசு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திருஞானசம்பந்தம்,முன்னாள் நிலவள வங்கித் தலைவர் துரைமாணிக்கம், கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன், பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் நாராயணசாமி, ரசன்னா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.