.

Pages

Sunday, August 26, 2018

வர்த்தக கழக நிர்வாகியாக 'நிருபர்' எஸ்.ஜகுபர் அலி தேர்வு!

எஸ். ஜகுபர்அலி 
பேராவூரணி ஆக.26-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நகர வர்த்தகர் கழக பொறுப்பாளர் தேர்தல் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் முன்னின்று தேர்தலை நடத்தினர். மாலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி, உடனடியாக தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் தலைவராக ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளராக ஏ.டி.எஸ். குமரேசன்,
பொருளாளராக எஸ். ஜகுபர்அலி ஆகியோர் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கு வியாபாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஜகுபர் அலி, தீக்கதிர் நாளிதழின் தஞ்சை மாவட்டச் செய்தியாளராகவும், பேராவூரணி பத்திரிகையாளர்கள் சங்கச் செயலாளராகவும் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. 
ஆர்.பி.ராஜேந்திரன்

ஏ.டி.எஸ். குமரேசன்,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.