தஞ்சாவூர் மாவட்டம், 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர்(பொ) டி.மணிமேகலை இன்று (04.03.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 04.03.2020 முதல் 26.03.2020 வரை மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 101 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 13027 மாணவர்களும், 15513 மாணவியர்களும், மொத்தம் 28540 பள்ளி மாணாக்கர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
தனித்தேர்வுகளுக்கு 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு நடைபெறும் 101 தேர்வு மையங்களில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2149 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 201 மாற்றுதிறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும் , சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 212 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (இடைநிலை கல்வி) ச கோபிதாஸ் அவர்களை கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாசியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்க்காவல் படைத்தலைவர் மற்றும் பிற துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.
2019-20 ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் முழுதேர்ச்சி பெறவேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெறவேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
தஞ்சாவூர் கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 04.03.2020 முதல் 26.03.2020 வரை மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 101 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 13027 மாணவர்களும், 15513 மாணவியர்களும், மொத்தம் 28540 பள்ளி மாணாக்கர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
தனித்தேர்வுகளுக்கு 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு நடைபெறும் 101 தேர்வு மையங்களில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2149 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 201 மாற்றுதிறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும் , சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 212 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (இடைநிலை கல்வி) ச கோபிதாஸ் அவர்களை கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாசியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்க்காவல் படைத்தலைவர் மற்றும் பிற துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.
2019-20 ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் முழுதேர்ச்சி பெறவேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெறவேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.