அதிரை 11 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி பெரிய தைக்கால்தெரு நேற்று இரவு இந்த பகுதியில்உள்ள மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மின்சாரவாரிய அலுவலகத்தின் கவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இந்தபகுதி மக்கள் திரண்டு வந்து இன்று காலை 10 மணியளவில் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகனங்கள் புறப்படுவதில் தாமதமாகின.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த செய்யது நம்மிடம் கூறியதாவது....
நேற்று இரவு 9 மணியளவில் மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவை அடுத்து தொடர்ந்து மின்பொறி ஏற்பட்டுக்கொண்டு இருந்தன. மின்கம்பத்தை சுற்றி நீர்தேங்கி காணப்பட்டதால் அதன் அருகில் சென்ற பாம்பு ஒன்று மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நாங்கள் மின்சார வாரிய அலுவகத்திற்கு தொடர்புகொண்டபோது மறுமுனையில் எந்தவித பதிலும் கிடைக்க வில்லை. தொடர்ந்து முயற்சித்த போது டெலிபோனின் ரிசீவரை கீழே எடுத்து வைத்துள்ளனர். இதனால் அவர்களை தொடர்புகொள்ள இயலவில்லை. இரவு முழுதும் கண்விழித்த நாங்கள் அதன் அருகில் யாரையும் செல்லவிடாமல் பாதுகாத்து கொண்டிருந்தோம். ஆத்திரமடைந்த நாங்கள் திரண்டு வந்து ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டோம் என்றார்.
இதையடுத்து தகவலறிந்த மின்சாரவாரிய ஊழியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கசிவை சரிசெய்ததை அடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதி முழுதும் சில மணிநேரங்கள் பரபரப்பாக காணப்பட்டன.
கோரிக்கைகளும் போராட்டங்களும் நியாயமான நோக்கத்திற்கானது தான் என்றாலும், இப்போதெல்லாம், எல்லாப் போராட்டங்களிலும் பெண்களை வீதிக்கு அழைத்து வரும் போக்கு சரியானதாகப் படவில்லை.
ReplyDeleteடிவிகளில் முகம் தெரிகிற அளவுக்கு பெண்களை முன்னிறுத்தி நடத்தப் படுகிற போராட்டங்களும், சேது ரோட்டில் பெண்கள் அமர்ந்தபடி செய்தித்தாள்களில் படங்கள் வருகிற படி நடத்தப் படுகிற போராட்டங்களும் இஸ்லாமிய பார்வையில் முறையானதல்ல.
Nalla velai..ithukum..chairman aslam avl thaan karranam endru pugar illai...
ReplyDeleteinnum avarkalukku - poi vazhakku podupavarkalukku - intha vishayam therinthirukkaathu, athaan innum vazhakku poda villai
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமின்சார வாரியம் எப்போது செய்யக்கூடிய வேலைதான் இது டெலிபோன் ரிசீவரை கீழே எடுத்து வைத்து விட்டு அவர்கள் எனக்கென்ன என்று செய்யும் மிக பெரிய தவறு இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteகோரிக்கைகளும் போராட்டங்களும் நியாயமான நோக்கத்திற்கானது தான் என்றாலும், இப்போதெல்லாம், எல்லாப் போராட்டங்களிலும் பெண்களை வீதிக்கு அழைத்து வரும் போக்கு சரியானதாகப் படவில்லை.
ReplyDeleteடிவிகளில் முகம் தெரிகிற அளவுக்கு பெண்களை முன்னிறுத்தி நடத்தப் படுகிற போராட்டங்களும், சேது ரோட்டில் பெண்கள் அமர்ந்தபடி செய்தித்தாள்களில் படங்கள் வருகிற படி நடத்தப் படுகிற போராட்டங்களும் இஸ்லாமிய பார்வையில் முறையானதல்ல.
அரசியல் கட்சிகள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், தலைவர் போன்றோர் நேரில் சென்று கேட்டிருக்கலாம். கொட்டும் மழையில் உடல்நனைய நம் கண்மணிகளாம் பெண்மணிகளை எல்லாரும் பார்வைபடும் இடத்தில் நிறுத்தி வைப்பது நெருடலாகவே படுகின்றது. கண்ணியமானவர்கள் நம் பெண்மணிகள்; அவர்களின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதும் நம் கடமை, கண்ணியம் கட்டுப்பாடாகவும். அண்மைகாலமாக்வே இப்படிப் பெண்களை நடுவீதிக்குக் கூட்டி வந்து அமரவைப்பதும்; நிற்க வைப்பதும் ஆன செயல்கள்- போராட்டம்- ஆர்ப்பாட்டத்தைக் காரணம் காட்டிச் செய்யப்படுகின்றன. பெண்களைத் தவிர்த்து ஊரில் உள்ள ஆணகள் கூடினாலும் கூட மின்சாரவாரிய ஊழியர்கள் வரத்தான் செய்வார்கள். அவர்களின் அலட்சிபப்போக்கு இன்று மட்டுமல்ல; பல ஆண்டுகளாகவே இந்தக் குறும்பை நமக்கு அவசரத்திற்கு உதவாமல் செய்யும் திமிரைக் கடைபிடிக்கின்றனர் என்பதை மறுக்கவோ, மறக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆயினும், தயவு செய்து நம் கண்மணிகளாம் பெண்மணிகளை மட்டும் கண்ணியமாக வெளியில் நிறுத்தாமல் இருங்கள் என்பதே என் பணிவன்பான வேண்டுகோளாகும். பர்தா என்னும் கேடயத்தை எடுக்க வேண்டும் துடிப்பவனெல்லாம் ஏன் அப்படிக் கேட்கின்றான் என்றால், எப்படியும் நம் கண்மணிகளாம் பெண்மணிகளின் அழகை இரசிக்க வேண்டும் என்ற “ஒரே துடிப்பும் ஆர்வமும்” தான். அதற்கு முட்டுக் கட்டையாக நாம் நம் சமுதாய்க் கண்மணிகளை - வைரம் போல் போர்த்திப் பாதுகாத்து வைத்து விட்டதால் அவன்களுக்குக் கோபம்; இப்பொழுது, இவ்வாறு கொட்டும் மழையில் நம் பெண்களை ஊடுருவிப் பார்கக்வே காமுகனக்ளின் கண்கள் அலைபாயும்; இந்தப் பட்ங்களில் செய்தியை விட வீதிக்கு வந்துள்ள நம் கண்ணானப் பெண்களைத்தான் காணத் துடிப்பான்கள் காமுகன்கள்.
ReplyDelete