.

Pages

Friday, December 6, 2013

தஞ்சையில் த.மு.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெறும் திரள் மக்கள் பங்கேற்பு ! [ புகைப்படங்கள் ]

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை 5 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிரை கிளையினர் மதியம் 2 மணியளவில் தக்வா பள்ளி அருகிலிருந்து பெண்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் 17 வேன்களில் புறப்பட்டு சென்றனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அப்துல் ஜப்பார், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அஹமது ஹாஜா, மமக மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் கோவை சுல்தான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். 

த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களின் உணர்வுகளை வெளிபடுத்தினார்கள். கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூட்டம் கடுமையாக காணப்பட்டதால் அந்த வழியே செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

1 1/2 மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டம் நிறைவுற்றதும் கலந்துகொண்ட அனைத்து கிளையினரும் ஊர் போய் சேர போலீசார் பாதுகாப்புகளை வழங்கினார்கள்.








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.