20-01-2013 : அதிரை கடற்கரை தெரு தர்ஹாவின் ஒரு பகுதியில் ஜொஹரா அம்மா என்ற பெயரில் திடீர் தர்ஹா ஏற்படுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
01-04-2013 : கடந்த [ 01-04-2013 ] அன்று நடுத்தெரு தக்வாப் பள்ளியின் நிர்வாக பொறுப்புக்கு புதிய நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட வக்ஃப் அலுவலர்களின் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து கடந்த [ 04-04-2013 ] அன்று இரவு தக்வா பள்ளியில் மவ்லூத் நிகழ்ச்சி நடைபெற்றது.
28-04-2013 : வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பினர் [ ATCO ] அதிரையில் நடத்தும் மாபெரும் பொருட்காட்சியின் அரங்கு கடந்த [28-04-2013 ] அன்று பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது. முதல்நாளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்களை அரங்கிற்குள் இலவசமாக அனுமதித்தனர் இந்த பொருட்காட்சியில் பல்வேறு நிறுவனத்தினரின் ஸ்டால்கள் இடம்பெற்று இருந்தன.
17-04-2013 : அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிலம் தொடர்பாக பள்ளியை நிர்வகித்து வரும் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கும், அதிரை பேரூராட்சி நிர்வாகித்தினருக்கும் வாதி பிரதிவாதியாக வழக்குகள் போடப்பட்டு நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தன.
இவற்றில் மற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் முக்கியமாக கருதப்படுகிற ‘இந்த இடம் யாருக்கு சொந்தம் ? ‘ என்ற வழக்கில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் இந்த இடம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கு சொந்தம் என்றும், அதில் பள்ளிவாசல் கட்டுவதற்குரிய முயற்சியில் சங்கத்தினர் ஈடுபடலாம் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
29-07-2013 : பட்டுகோட்டை அதிராம்பட்டினம் சாலை காளிகோயில் அருகில் இன்று பகல் சுமார் 2.00 மணியளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது SRM பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஸ் கவிழ்ந்து பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்றுள்ளனர். இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

17-08-2013 : அதிரை காட்டுப்பள்ளித் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் அருகே நெய்னாப் பிள்ளை அவர்கள் அடங்கிய அடக்கஸ்தலமும் உள்ளது. இவற்றின் மேற்கூரை கீற்றால் அமைக்கப்பட்டு அடக்கஸ்தலத்தைச் சுற்றி சுவற்றால் எழுப்பபட்டு சிறிய குடிலாக காட்சியளித்து வந்தன. கடந்த [ 17-08-2013 ] அன்று அதிகாலை 12 மணிக்கு மேல் ஏற்பட்ட தீயில் அடக்கஸ்தலத்தின் குடில் முற்றிலும் எறிந்து கருகின. இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.


02-10-2013 : தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில் இன்று [ 02/10/2013 ] இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, கோழிக்கடை, சலூன்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து சாம்பலாகின. இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

05-09-2013 : இன்று [ 05-09-2013 ] மாலை 4.30 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

20-10-2013 : அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பாக கடந்த 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
26-09-2013 : அதிரை நகரில் பிளாஸ்டிக் பயன்பாடுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை குறைப்பது, நகரில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் ?, நகரில் பிளாஸ்டிக் கேரி பைகளை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கலாமா ? அல்லது தடை செய்யலாமா ?, அதிரை நகரின் வளர்ச்சிக்காக பேரூராட்சியின் சார்பாக என்னென்ன திட்டப்பணிகளை அமல்படுத்தலாம் ? ஆகியன குறித்து மேற்கண்ட விவாதங்களை எடுத்துக்கொண்டு கடந்த [ 26-09-2013 ] அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

05-11-2013 : ஒரு கிலோ 160 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிராய்லர் கோழி இறைச்சி இன்று அதிசயமாக 90 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

02-11-2013 : 'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' தகவல் தொழில்நுட்பமா !? அல்லது மாறிவரும் கலாச்சாரமா !? என்ற இரு வேறு தலைப்புகளில் அதிரையின் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர்கள் இரு அணிகளாக இருந்து மோதும் சூடான விவாதங்கள் அதிரை நியூஸ் சார்பாக நடத்தப்பட்டது. இவை அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றன.

02-12-2013 : அதிரை பேரூராட்சிக்குட்பட்ட 8, 9, 10 ஆகிய வார்டுகளில் கடந்த சில மாதங்களாக போதுமான குடிநீரை விநியோகிக்கவில்லை எனக்கூறி இப்பகுதி மக்கள் திரண்டு வந்து பேரூராட்சி எதிரே உள்ள ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

16-12-2013 : அதிரையில் வறண்டு காணப்படும் குளங்களுக்கு நீர்ஆதாரத்தை கொண்டு வருவது தொடர்பாக அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள். இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தொகுப்பு : அதிரை நியூஸ் குழு
2013 வருடத்தின் அதிரையின் அனைத்து உணர்வுச் சுவைகளையும் (உப்பு, உரப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு )அழகாக தொகுத்து வழங்கியது மிகச் சிறப்பு. தரமான வலைதள இதழாக மிளிரும் முயற்சிகள். வாழ்க.
ReplyDeleteGood collection ,,,,,masa allah
ReplyDeleteஅதிரை நியூசா இல்லை கொக்கா என்று சொல்லும் அளவூக்கு அருமையான தொகுப்பு அமைந்துள்ளது. தொகுப்புகலை பதிவு செயததிர்க்கு நன்றி.
ReplyDeletegood recall, you are rocking.. masha allah
ReplyDeletemasha allah
ReplyDeleteஅருமையான பதிவு தொகுப்பு அமைந்துள்ளது,
ReplyDelete2013 வருடம் முடிவுக்கு வரும் தருவாய் உள்ள இந்த நேரத்தில் மீண்டும் நம் நினைவுக்கு வரும் படி பதிந்தமைக்கு நன்றி.அருமையான தருனங்கள் புகைபபடங்கள் வாழ்த்துக்கள்
ReplyDelete2014 நமது சமுதாயத்துக்கு நல்ல நாளக இருக்க அல்லாஹு இடம் துவா செய்வோம்.
பதிவு செயததிர்க்கு நன்றி.
ReplyDeleteReply
நினைவு நாடாவைச் சுழல விட்டதற்கு நன்றி.
ReplyDeleteநிகழ்வுகளை மீண்டும் நினைவூட்டி நெஞ்சினில் நிலை கொண்ட அதிரை நியூஸின் அரும்பணி மென்மேலும் சிறந்தோங்க வாழ்த்துவோம்.
ReplyDelete