இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் இந்த அரும்பணிகளுக்கு ஆகக்கூடிய செலவினங்களை உத்தேசமாக 50 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டு இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்களிடம் வசூல் செய்யப்பட்டன. கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் உதவ முன்வந்தனர்.
மேலும் உதவ எண்ணுகின்றவர்கள் சமூக ஆர்வலர்கள் N.M. முஹம்மது அப்துல்லா [ 0091 9629997237 ] மற்றும் M.S. அஹமது அமீன் [ 0091 9789138064 ] ஆகியோரை தொடர்பு கொண்டு உதவலாம்.
மின்னஞ்சல் வழி கருத்து :
ReplyDeleteஅஹ்மத் அமீன் அவர்களிடமிருந்து...
அஸ்ஸலாமு அலைக்கும், நமது முதல் கோரிக்கை ராஜாமடம் நசூனி ஆற்று நீர்தான் அதனுடைய வேலைகள் நம்மலுடைய அவசரத்துக்கு கிடைக்காது அதன் வேலைகள் நிறைய இருபதாலும், பம்பிங் சிஸ்டத்தின் அடிப்படையில் நீர் கொண்டு வர முடியும். நீர் பாசனம் வரவு முடியும் தருவாயில் இருப்பதாலும், நாம் வறட்சியை சந்திதுகொண்டு இருப்பதாலும், சுதந்திர இந்தியாவுக்கு பிறகு யாரும் எடுத்திடாத முயற்சியை அமீன், அப்துல்லாஹ், அஸ்லம் ஆஹிய இவர்கள் மூலமாக அல்லாஹ்தாலாஹ் ஏவி உள்ளான். தற்போது நீர் வர உள்ள இந்த சி.எம்.பி லைன் பழமை வாய்ந்தது ஆஹையல் இதை நாம் வருங்காலங்கில் அதிக கவனம் செலுத்தி தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாலும் சுற்றுவ்ட்டரங்களிலும் நீர் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பொதுப்பணித்துறை மூலம் வரும் கோடைக்காலத்தில் அவர்கள் பணியை மேற்கொள்ளுவதற்கு நம்மலுடைய முயற்சியும் அவர்களுடைய பணியும் தொடங்க வேண்டும். ஆகையால் அதிரை வாழ் அணைத்து மக்களும் பாகுபாடு மற்றும் கருத்துவெற்றுபாடின்றி முயற்சி செய்ய அல்லாஹ்விடம் து'ஆ செய்த வண்ணம் முயற்சி செய்வோமாக... ஆமீன்