.

Pages

Monday, December 9, 2013

ஜொலிக்கும் செட்டியா குளம் !? [ புகைப்படங்கள் ]

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி கடந்த சில மாதங்களாக குளத்தை புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

நமது அதிரை நியூஸ் வாசகர் லெ.மு.செ. சைஃப்தீன் அவர்கள் ஜொலிக்கும் செட்டியா குளத்தை பல கோணத்தில் புகைப்படங்களை எடுத்து நமக்கு அனுப்பிவைத்தார். அழகாக காட்சியளிக்கும் இந்த புகைப்படங்களை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக இதோ...




15 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்.
    முயற்ச்சி செய்த அனைவருக்கு பாராட்டுக்கள், இது போன்ற பணிகள் எனபது இலகுவாண காரியம் இல்லை, உங்கள் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், என்றென்றும் துஆ உடன் ஆமீன்...

    ReplyDelete
  2. திறம்பட செய்த முயற்சி, கடைசி வரை தூய்மையாக பாதுகாக்கணும்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    முயன்றோர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்கும். சிறு வயதில் பள்ளிப் பாடத்தில் இடம்பெற்ற மொஹோஞ்சோதர ஹரப்பா சமவேளிபோல் இருக்கு.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. இதில் உதவிய அரசாங்கம் இதில் முழு முயற்சி செய்து இந்தபணியை மிக சிரப்பாக முடிவுக்கு வரும் தருவாயில் இருக்கும் செட்டியா குளம் புகைப்படம் அருமை.இந்த குளத்தை அசுத்தம் செய்யாமல் நன்றாக பயன் படுதிக்கொள்ளவும் மக்கள்.

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ்... அதிரை மக்களின் (குறிப்பாக நடுத்தெருவாசிகள்) நீண்ட நாள் கனவு நிறைவேறியது..இதனுடைய முழு முயற்ச்சியும் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் எடுத்த முயற்சி தான் என்றால் அது மிகை இல்லை..

    ஒரு கூட்டம் criticise பண்ண ரெடியாக இருக்குமே..என்னதான் criticise பண்ணினாலும் 40, 50 வருட குளத்தை கண்டு பிடித்து தந்த சேர்மன் நீடுழி வாழ அல்லாஹ் அருள் புரிவானாக.

    Mohamed Naina
    Dubai

    ReplyDelete
  6. Dear Brother Naina .......Criticism is part business of it.I like political much and more but I never accepted the politicians at all... மேலும் தமிழில் ஒரு உவமை ...... பழுத்த மரமும் காய்த்த மரமும் கள்ளடி படுவது இயற்கையே. like our Chairman S.H.Aslaam.

    ReplyDelete
    Replies
    1. Thanks for ur reply brother. What I mean, people may criticise with Egoism..(நான் தான் செய்தேன். நீ செய்யவில்லை....நானா நீயா)

      Delete
    2. Thanks for ur reply brother. What I mean, people may criticise with Egoism..(நான் தான் செய்தேன். நீ செய்யவில்லை....நானா நீயா)

      Delete
  7. நான் எனது சின்ன வயதில் இந்தக்குளத்தைப் பார்த்து இருக்கிறேன். செடி கொடிகள் படர்ந்து பச்சை நிறத்தில் அழுக்குத்தண்ணீ ருடன் பரிதாபமாக காட்சியளிக்கும். இந்தக் குளம் இந்த அளவுக்கு சீராகும் என்று நான் நினைக்கவில்லை.

    இப்படி அதிரையில் உள்ள அனைத்துக் குளங்களையும் சீர்படுத்தி அசுத்தப் படாமல் பாதுகாத்து வந்தால் அதிரையில் தண்ணீர்ப் பஞ்சம் தீர்ந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. Sutham pannathellam ok thanni yepdi viduvinga ...? Illa yethula irunthu thani varum...?

      Delete
  8. அல்ஹம்துலில்லாஹ்... அதிரை மக்களின் (குறிப்பாக நடுத்தெருவாசிகள்) நீண்ட நாள் கனவு நிறைவேறியது..இதனுடைய முழு முயற்ச்சியும் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் எடுத்த முயற்சி தான் என்றால் அது மிகை இல்லை..

    சேர்மன் அவர்களுக்கு Hats Off.......

    ReplyDelete
  9. சுகாதாரத்திற்கு முன்னுரிமை தந்து செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

    அதே சமயம், ஒரு திட்டம் முழுமை பெற்று செயல்வடிவம் கொடுக்கப்ப்படும்பொழுதுதான் அதன் முழு பயனும் மக்களை வந்தடையும்.

    இதன் தொடர்ச்சியாக, இந்த குளம் மீண்டும் சாக்கடை குளமாக மாறாமல் நன்னீர் குளமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன் வர வேண்டும்.

    இக்குளத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவுற்ற பின் வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீரையாவது இக்குளத்திற்கு கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில், ஏற்கனவே ஆற்று நீர் வாய்க்கால்கள் அமையப்பெற்ற குளங்களுக்கே தண்ணீர் வந்தடையவில்லை, பிறகு எப்படி இந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவார்கள் என்பது அனைவரின் கேள்வியாகவுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் தந்தால் நன்றாக இருக்கும்.

    குறிப்பு:
    செயல்களை பாராமல் செய்பவர் யார் என்று பார்த்து அந்த செயலையே குறை கூறுவதை வழக்கமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், அதே வேளை குறிபிட்ட அந்த செயலை பாராமல் செய்கின்ற நபரை வைத்து கண் மூடித்தனமாக புகழ்பவர்களும் இருக்கிறார்கள்.


    "நல்லதை நாடுவோம் அல்லதை சாடுவோம்"

    ReplyDelete
  10. செட்டியா குளம் இனி சேர் சகதி இல்லாத வளம்!

    ReplyDelete
  11. முயற்ச்சி செய்த அனைவருக்கு பாராட்டுக்கள், இது போன்ற பணிகள் எனபது இலகுவாண காரியம் இல்லை, உங்கள் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், என்றென்றும் துஆ உடன் ஆமீன்...

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.