.

Pages

Tuesday, December 17, 2013

வறண்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக சிஎம்பி வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் மும்முரம் !

அதிரையின் வறண்ட குளங்களுக்கு நீர் ஆதாரத்தை கொண்டு வருவதற்காக அதிரையில் வாழும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரை நேற்றைய தினம் சந்தித்தனர். அதனை தொடர்ந்து பேரூராட்சி துறை அலுவலர், பொதுப்பணித்துறை அலுவலர் ஆகியோரை சந்தித்து பணிகளை துரிதப்படுத்த கேட்டுக்கொண்டனர்.

இந்த பணிகளுக்காக அதிரை பேரூராட்சியின் சார்பாக இன்று காலை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு விலாரிக்காட்டிலிருந்து வண்டிப்பேட்டை வரை உள்ள சிஎம்பி வாய்க்காலின் மேடுகள், அடைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மும்முரமாக நடைபெறும் இந்த பணிகள் நிறைவுற்றதும் தண்ணீர் கொண்டு வருவதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பணியின் போது பொதுப்பணித்துறை அலுவலர்கள், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், சமூக ஆர்வலர்கள் முஹம்மது அப்துல்லா, அஹமது அமீன், வீரையன் ஆகியோர் உடனிருந்தனர்.





5 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்.
    ஆஹா என்ன அருமை பார்க்கும் பொழுதே சந்தோசமாக இருகின்றது, இன்ஷா அல்லாஹு தண்ணீர் வந்தால் எப்படி இருக்கும் நினைக்கும் போதே மனம் மகிழ்கிறது, ஏற்ப்பாடு செய்து முழு அளவில் களத்தில் இறங்கி வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்க்கள், என்றென்றும் துஆ உடன்.....

    ReplyDelete
  2. வறண்ட குளங்களுக்கு வாழ்வளிக்கும் இந்த மகத்தான பணிக்கு செயல்வடிவம் கொடுக்கும் அருமை சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நன்மையை தந்தருள்வானாக ஆமீன் .

    என்றும் அன்புடன்
    அதிரை ஹசன் .

    ReplyDelete
  3. ஆற்று நீரின் நுழைவு வாயிலாம் cmp எனும் வாய்க்கால் தண்ணீரை வருக வருக என வரவேற்ப்போம் கூடிய விரைவில் அல்லாஹ் உங்களின் சேவையை ஏற்றுக்கொள்வானாக

    ReplyDelete
  4. அஹ்மத் அமீன்
    அஸ்ஸலாமு அலைக்கும், நமது முதல் கோரிக்கை ராஜாமடம் நசூனி ஆற்று நீர்தான் அதனுடைய வேலைகள் நம்மலுடைய அவசரத்துக்கு கிடைக்காது அதன் வேலைகள் நிறைய இருபதாலும், பம்பிங் சிஸ்டத்தின் அடிப்படையில் நீர் கொண்டு வர முடியும். நீர் பாசனம் வரவு முடியும் தருவாயில் இருப்பதாலும், நாம் வறட்சியை சந்திதுகொண்டு இருப்பதாலும், சுதந்திர இந்தியாவுக்கு பிறகு யாரும் எடுத்திடாத முயற்சியை அமீன், அப்துல்லாஹ், அஸ்லம் ஆஹிய இவர்கள் மூலமாக அல்லாஹ்தாலாஹ் ஏவி உள்ளான். தற்போது நீர் வர உள்ள இந்த சி.எம்.பி லைன் பழமை வாய்ந்தது ஆஹையல் இதை நாம் வருங்காலங்கில் அதிக கவனம் செலுத்தி தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாலும் சுற்றுவ்ட்டரங்களிலும் நீர் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பொதுப்பணித்துறை மூலம் வரும் கோடைக்காலத்தில் அவர்கள் பணியை மேற்கொள்ளுவதற்கு நம்மலுடைய முயற்சியும் அவர்களுடைய பணியும் தொடங்க வேண்டும். ஆகையால் அதிரை வாழ் அணைத்து மக்களும் பாகுபாடு மற்றும் கருத்துவெற்றுபாடின்றி முயற்சி செய்ய அல்லாஹ்விடம் து'ஆ செய்த வண்ணம் முயற்சி செய்வோமாக... ஆமீன்

    ReplyDelete
  5. நமதூருக்கு மிக மிக அத்தியாவசியமான இந்த திட்டம் முழுமையடைந்து அனைத்துக் குளங்களும் நீரால் நிரப்பட்டுவிட்டால் ஊர் பார்க்க எவ்வளவு செழிப்புடன் இருக்கும். ! இத்திட்டம் முழுமையடைய அதிரை வாசிகள் அனைவரும் பாகுபாடின்றி ஒத்துழைக்க வேண்டும்.

    செடியன்குளத்தில் நீச்சலடித்துக் குளித்து பல வருடங்கள் ஆகுது..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.