.

Pages

Friday, December 20, 2013

அதிரையில் நடந்த கடலோர பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் !

அதிரை செல்லியம்மன் சமுதாய கூடத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கடலோர பாதுகாப்பு குழும ஐ.ஜி சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில்  கடற்படை, சுங்கத்துறை, வனத்துறை, வருவாய்துறை என பல்வேறு துறை அதிகாரிகளும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 37 மீனவ கிராம பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மீனவர்களின் முக்கிய பிரச்னைகள் பற்றி பேசப்பட்டது. ஒவ்வொரு மீனவர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். முக்கியமாக அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, லைப்ஜாக்கெட், சூரிய ஒளி மின்சாரம் போன்றவை முன் வைக்கப்பட்டது. பின்னர் ஐ.ஜி.சொக்கலிங்கம் பேசுகையில், கடலில் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை பிடிக்கக் கூடாது. இரட்டைமடி, சுருக்கு மடி ஆகிய வலைகளை பயன்படுத்தக்கூடாது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய, சர்வதேச எல்லைக்குள் மீன் பிடிக்க வேண்டும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது படகிற்கு உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். கடலில் சந்தேகப்படும் வகையில் மர்ம படகுகள் மற்றும் அன்னிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் 1093 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை கூறவும். கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் மீனவர்கள் அகப்பட்டுக் கொண்டால் 1093 எண்ணை தொடர்பு கொண்டால், உடன் வந்து காப்பாற்றுவார்கள் என்றார். 

செய்தி : தினகரன்
புகைப்படங்கள் : அதிரை நியூஸ்



1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.