.

Pages

Friday, December 13, 2013

அதிரையில் பாண்டியன் கிராம வங்கியின் புதிய கிளை உதயம் !

அதிரை பேருந்து நிலையம் எதிரே பழைய கனரா வங்கி  அமைந்திருந்த கட்டிடத்தின் மாடியில் இன்று காலை 10 மணியளவில் பாண்டியன் கிராம வங்கியின் புதிய கிளை உதயமாகியது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சை மண்டல மேலாளர் ராஜேந்திரன் கிளையை திறந்து வைத்தார்.

வங்கியின் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்து பேசும் போது,
மத்திய மாநில அரசு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியன இணைந்து கடந்த 1977 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 127 கிளைகள் உள்ளன. தற்போது 128 கிளையை அதிரையில் துவங்கியுள்ளது. வங்கியின் முதன்மையான நோக்கம் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், சிறுதொழில்கள், குறுந்தொழில் செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடனுதவி, கல்விக்கடன், வாகனக்கடன் ஆகிய உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தேசிய வங்கிகளுக்கு இணையாக அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் எளிமையான முறையில் வெளிநாடுகளில் இருந்து நேரிடையாக பணம் பெற்றுக்கொள்ளும் WESTERN UNION MONEY TRANSFER வசதி, இஸ்லாமிய பெண்கள் அமர்வதற்கு பிரத்தியேக தனியறை ஆகியன இந்த கிளையில் அமைந்துள்ளது என்றார். மேலும் விரைவில் ATM வசதியும் செயல்பட உள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.

துவக்க விழாவில் அதிரை நகரின் முக்கியஸ்தர்கள், வங்கியின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.