பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் சரகம் ஏரிப்புறக்கரையில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது. டிஆர்ஓ சுரேஷ்குமார் தலைமை வகிக்கிறார். இதில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி விதவை உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டம் மற்றும் தொடர்புடைய மற்ற நலத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் பட்டா மாறுதல், சான்றுகள் குறித்தான மனுக்களை முன்னதாகவே பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் விண்ணப்பிக்கலாம்.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, சுகாதாரத்துறையினரால் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ முகாம், கால்நடை முகாம், ஆதார் அடையாள முகாம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடத்தப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு டிஆர்ஓ சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினகரன்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
பயனுள்ள சந்திப்பு அனைவரும் நன்றாக பயன்படுதிக்கொள்ளவும்.
ReplyDeleteSalam..yerkanavey amma thittamnu vandhu pattakku kodathen but edhuvaraiyum adhukku onnum badhil varalaye adhukkullay marubadiyuma??
ReplyDeleteஅதிரை நியூஸ் தரும் அதிரைக்கு வேண்டிய நியூஸ்.
ReplyDelete